பக்கம் எண் :

22 பாசவதைப் பரணி

 

சமனி லாத விருவினைக் காவடி
      தாங்கி நாளுந் தழும்புறு தோளின.

(36)
   

122.

ஓரி மைக்கு ளழிந்திடு மென்பதை
      உன்ன லன்றி யுலைத்துலைந் தேதினம்
பாரி மக்க ளெனுங்குடும் பச்சுமை
      பரித்துப் பங்கி பறிந்த தலையின.

(37)
  

123.

தேற்ற மென்கின்ற தொன்றுமி லாமையாற்
      சினந்தி யாரையுஞ் சீறிச் சுடுங்கொடு
மாற்ற மென்கின்ற வல்லழல் புல்லியே
      வளர நாளும் வறண்டிடு நாவின.

(38)
   

124.

வழியி லாதவர் சொல்லிய சொல்லற
      வகுத்த வான்கரும் பெள்ளிமெய்ஞ் ஞானநல்
விழியி லாதவர் சொல்லிய சொல்லெனும்
      வேம்பை நச்சி விரும்பிக் கடிப்பன.

(39)
   

125.

சோறுண் டுண்ணவங் கென்னி னவர்களைச்
      சுற்றி யுற்றவர் போலத் தொடர்வன
பேறுண் டென்னினுஞ் சோறில்லை யாய்விடிற்
      பிரிந்து பாரா பிறகிட்டு நிற்பன.

(40)
   

126.

வாய்க்கு மோர்வெறுங் காடியே தாயினும்
      வாய்க்கு மாயின் வழுதுணை கல்லிலே
காய்க்கு மோவெனக் கொம்புதோ றாயிரங்
      காய்க்கு மேயெனக் கட்டுரை செய்வன.

(41)
   

127.

பெற்றி யுற்ற சுகானந்த போனகம்
      பெற்றி ருந்தும் பிரிந்தே விடுப்பன
பற்றி யுற்று வெறும்புற்கை யாயினும்
      பாடி யாடித்தம் பாழ்வாய் மடுப்பன.

(42)

122. பாரி - மனைவி. பங்கி - மயிர்.

பி - ம். ‘பாரின் மக்கள்’

123. தேற்றம் - தெளிவு. கொடு மாற்றம் - வன் சொல்.

124. பி - ம். ‘வெம்மை நச்சி’

125. பிறகிட்டு - பின் புறம் காட்டி ; “உண்ண லான விடந்தொறு மற்றவர்க் குற்ற நட்டவர் போலுற வாடுவ”, “பிண்ட மிட்டவர் தம்பிற கேஞஞ்ஞை பிஞ்ஞை யென்று பிதற்றித் திரிவன” அஞ்ஞவதைப்.

126. வழுதுணை - கத்தரிக்காய்.

127. புற்கை - கூழ்.