பக்கம் எண் :

4. பேய்களைப் பாடியது 23

128.

வைய மெங்கு நொடி யொன்றிற் சுற்றியே
      வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டுலைந்
தைய மெங்கு மெடுத்துண் டவாவெனும்
      அம்பு ராசி யழுந்திக் கிடப்பன.

(43)
   

 129.

வான முற்றும் வயிறா விலாவிற
      வாரி வாரித்தம் வன்பில வாய்திறந்
தூன மற்ற வுயர்கதி யீதென
      உண்டுந் தூரா வுதரக் குழியின.

(44)
  

130.

கடிய வாகி நகையு முவகையும்
      காய்ந்து கொல்லுங் கடும்பகை யாயடும்
கொடிய வாகிய கோபா னலத்தினாற்
      கொதித்த ழன்று கொளுந்து முகத்தின.

(45)
 

வேறு

 

 131.

உண்ண விட்டவகை தேடி வீடுதொறும்
      ஓடு மேயுருகி வாடுமே
நண்ண விருநிதிகள் கோடி நாடுதொறும்
      நாடு மேமயலி னீடுமே.

(46)
   

 132.

ஐந்து புலன்வழி யேகி யேநிறைய
      ஆரு மேநிலைமை சோருமே
சந்து பலமுறை போகி மாயரதம்
      ஊருமே கசடு சேருமே.

(47)
   

133.

கள்ள மாகவுல கெண்ணு மாறுசடை
      கட்டு மேமரண மட்டுமே
வெள்ள மாகவுல கெண்ணு மாறுபடை
      வெட்டுமே யரண முட்டுமே.

(48)

128. அம்பு ராசி - கடல். “வயிறு சாணும் வளர்த்தற் பொருட்டந்த வானஞ் சென்று வரக்கா லுடையன” அஞ்ஞவதைப்.

129. தூரா உதரக்குழி : “தூராக் குழியைத் தூர்த்து” (திருவிடை. ழம். 7); “தூராச் சலதி தூரினுந் தூராப், படுகுழி யுதரம்” மதுரை ழம் மணிக்கோவை, 19.

130. கோபானலம் - சினமாகிய தீ ; குறள், 304.

132. சந்து - தூது.

133. கள்ளமாகச் சடைகட்டு மென்க. எண்ணுமாறு - மதிக்கும்படி.