பக்கம் எண் :

24 பாசவதைப் பரணி

134.

ஊறி யேதுவர் பிடித்த வன்கலை
      உடுக்கு மேயுடை விடுக்குமே
தூறி யேமுன் முடித்த சண்டைகள்
      தொடுக்கு மேபல வடுக்குமே.

(49)
   

135.

நல்ல தென்றுலகு சொல்ல வேமிக
      நடிக்கு மேசொல வடிக்குமே
வல்ல தென்றுலகு சொல்ல வேமறை
      வடிக்கு மேதலை வெடிக்குமே.

(50)
  

136.

கடிய குரன்ஞமலி யென்ன வந்தெதிர்
      கடிக்கு மேபல படிக்குமே
கொடிய கொலையுழுவை யென்ன வந்துயிர்
      குடிக்கு மேயுரு மிடிக்குமே.

(51)
   

137.

சோறு கண்டபொழு தேயெ முந்துதுடி
      துடிக்கு மேமன மடிக்குமே
பேறு கண்டபொழு தேயெ ழுந்துமடி
      பிடிக்கு மேசுரை குடிக்குமே.

(52)
   

138.

பந்த மீதுவிது முத்தி யென்றுசில
      பகுக்கு மேவினை தொகுக்குமே
மந்த மீதுவிது தீவ்ர மென்றுசில
      வகுக்கு மேநய முகுக்குமே.

(53)
 

உவமை

 
 

வேறு

 

139.

மனனாலு மொழியாலு மறியா வொன்றை
      வாக்காலே யறிவிக்கு மாட்சி யம்மா
புனலாலே யனல்சுடுதல் போலும் போலும்
      போலாவேற் புனலிலெழுங் கனலே போலும்.

(54)
   

140.

ஏகாச மிட்டிறுமாந் திருந்து நல்வீ
      டினிதளிப்ப மெமக்குவீ டியற்று கென்றல்
ஆகாச கமனமுனக் குணர்த்த விவ்வாற்
      றக்கரைக்கே செலுத்துகென வறைதல் போலும்.

(55)

134. தூறி - ஏசி.

136. உழுவை - புலி.

137. சுரை - கள்.

138. பி - ம். ‘தீர மென்று’140. ஏகாசம் - போர்வை ; “ஆகாச மிட்ட கைகள், ஏகாச மிட்ட மெய்கள்” (அருணாசலகவி) ; பிரபு. மாயை கோலாகல. 70.