5. கோயிலைப் பாடியது | சோலை | | 147. | சொற்ற பேய்கள்புகு மாறிலாத் தூய யோகநில யந்தனில் உற்று வாழிறைவி வாழ்தரும் ஒளிகொள் சோலையுயர் சோலையே. | (1) | | | | 148. | பூமி நீரனலம் வாயுவான் புல்கி லாதிரவி சோமரும் தாமி லாதுபர நாதனார் தாள்வி டாரினிதின் வாழ்வதே. | (2) | | வேறு | 149. | ஆறுகண் ஞானதி வாகர ராறுகள் வீறுத டாகமும் ஆசைகு ரோதமிவாதிய வாறு மிலாதவ ரருளரோ ஊறுகளாவன வேறில வோதவொ ணாதொளி யாகிய ஊழிதொ றூழியுமேநுகர்யோகுயர் சாகையி னமுதமே. | (3) | | வேறு | | 150. | உடலு மழலுற வுயிரு மழலுற உறுதி கெடவரு மிறுதிநாட் கடலு நிகரல வெனமு னிலவுமொர் கருணை நிழறரு பொழிலதே. | (4) |
147. சொற்ற - முன் சொன்ன. நிலயம் - கோயில். “போகாத துயர்மேவு பொல்லாத விப்பேய்கள் புகுமாறிலா, யோகால யத்துள் ளிருப்பா டிருச்சோலை யுட்சோலையே” அஞ்ஞவதைப். 148. அனலம் - தீ. நாதனது தாளை விடாதவர். “ஆகாச நீர்பூமி யனல்கா லிரவிசோம ரவியாதுமூ, டேகாச தரநாத னடியார்கள் பயில்வார்க ளினிதாகவே” அஞ்ஞவதைப். 149. ஆறு : ஆசை, குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பன. |