தேவி கோயில் | வேறு | | 151. | கூறு வேதமுஞ் சூழு தற்கரும் கோயி லுக்குநா னளவை கூறுகேன் ஆறு நாலுதிக் குள்ள நீளமே அம்மை கோயிலுக் களவை யாவதே. | (5) | | | | 152. | கமல யோனியே முதல தேவரும் காணு தற்கருங் ககன மண்டலத் தமலை கோயில்கண் டமைய வோதுமா றரிய தாகுமெப் பெரிய ராலுமே. | (6) | | வேறு | 153. | உன்னு தோறு முணர்விற்கெட் டாதுயர் உண்மை ஞான மொருங்குடன் சூழ்மதில் மன்னு கோபுர மாமறை யுச்சியில் மலிவுற் றோங்கு மகாவாக்கி யங்களே. | (7) | | | | 154. | அண்ட ரண்டநூ றாயிர கோடிகள் அணுக்க ளாகிமற் றங்கங் குலவிட மண்டு கின்ற பரம வியோமமே மண்ட பம்முயர் மாளிகை சூளிகை. | (8) | | | | 155. | பசையி லிவ்விவ கார திசையிடைப் பயிற்சி நீங்கியப் பார மார்த்திக வசையி லத்திசை யுள்ளதன் வாய்மையை வகுக்கொ ணாதது வாங்மனோ தீதமே. | (9) | | | | 156. | பந்தர் வானம் விதான மந்தாகினி பத்தி வாயி லவித்தை கபாடமே சந்த்ர சூரிய ருட்களஞ் சக்கரம் தண்டு சூலஞ் சலியாத காவலே. | (10) |
151. “ஆதி நாலுமா மறைகள் சூழ்வதற் கரிய கோயிலுக் களவு கூறவோ, ஓது நாலிரண் டுடனிரண்டுதிக் குண்டமேனியக் கோயிலுள்ளதே” அஞ்ஞவதைப். 152. கமலயோனி - பிரமதேவன். 154. சூளிகை - உச்சியிலுள்ள மண்டபம். 155. பசை - அன்பு. அத்திசையுள் அதன். வாங்மனோதீதம் - வாக்கிற்கும் மனத்திற்கும் அதீதமானது. 156. பி - ம். ‘பரந்த வானம்’ |