பக்கம் எண் :

30

பாசவதைப் பரணி

உலைவி றண்சினை பொறிவிரி பணகண
        உரகர் தம்பதி யெழுமையு முலவுல
    துலக மெங்கணு முருவின ததன்விழு
        துரையி றந்தது முணர்வினி லுணர்வதே.

(19)
 

வேறு

 

166.

வசையின் மூவ ரதன்மிசை மன்னு மூச லாடியே
விசையி னொன்றி னின்னமு மீள்வ ரல்லர் போவரே.

(20)
  

167.

மாய்வி லாத வருளினான் மாற்றி னன்றி வல்விசை
ஓய்வி லாத வூசன்மூவ ரூச லூச லல்லவே.

(21)
 

வேறு

 

168.

வீழோட்டி மேனோக்கி மென்கவடு திசையோட்டிக்
கீழோட்டி மலர்ந்தசிகை கிளர்வடமற் றவ்வடமால்.

(22)
   

169.

ஆசையெனுஞ் சிறகுவிரித் தைம்புலமாங் கொடுங்கண்ணிப்
பாசவலைப் பறந்துவிழாப் பறவையதிற் படிவனவால்.

(23)
   

170.

தண்ணருளே திருவுருவாய்த் தாயாய்வந் தருள்செய்த
அண்ணறிரு மேனியவ்வா லறிந்தவா றறைகுதுமால்.

(24)

166. “சடாதரனும், அரியுமல ரவனுமதி, லேநின்ற வூசன்மிசை அணையவரி னவர்கள்விசை போயன்றி மீள்விலரே” அஞ்ஞவதைப்.

168. “மேனோக்கி வீழோட்டி விரிதிசையே கவடோட்டிக், கீழ்நோக்கிக் கிளையோட்டிக் கிளரவளர் வடமிதுவே” அஞ்ஞவதைப்.

170. இனி அறைகுதும். பி - ம். ‘மேனியல்லால்’