6. தேவியைப் பாடியது 171. | வரமி குத்தன மறைகள் பற்பல வருட முற்றிலவே பரம தற்பத வமல சிற்கன பதயு கத்தினளே. | (1) | | | | 172. | அணிய பற்பல பிறவி யுற்றதி னமிழு மத்துயரே தணிய வற்புத வமுத முற்றருள் தனத டத்தினளே. | (2) | | வேறு | 173. | முறுகித் துயர்வாரியின் முழுகிப் பலகாலமும் முடலைச்சுமை யேகொடு முடிவற்றயர் வேனையுமே குறுகிப்பணி வாயருள் குலவிப்பணி வாயொரு குறையற்றிரெ னாநனி குழையுற்றலை காதினளே. | (3) | | வேறு | | 174. | அழிவற மிகுந்த காரிருள் அதனிடை மறைந்து நாடொறும் அருவினை படர்ந்து மூடுற அயர்வுட னிரங்கு வேனையுமே ஒழிவற நிறைந்த பேரருள் உருவொடு நடந்து வாழ்கென உரையுணர் விகந்த மேன்மைய ஒருமொழி பகர்ந்த வாயினளே. | (4) | | வேறு | | 175. | ஈனந்தம் வசமாக வெழுபிறவிச் சுழல்வோரும் ஆனந்தக் கடலாட வருள்பொழியும் விழியினளால். | (5) | | | | 176. | வாக்கினொடு மனத்தினுக்கு மருவாத பொருளதனைத் தூக்கினொடு பொருள்படுத்திச் சொல்லுமா றெவ்வாறே. | (6) | | | | 177. | ஒழியாம னிறைந்தவவட் குருவமில்லை யேயென்கோ அழியாம லாளவந்த வருட்கோலங் கண்டுமே. | (7) |
* பி - ம். காளி நிலை. 172. பி - ம். ‘பிறவியுற்றதி னமிழத்துயரே’, ‘யுற்றதிகழுமத்துயரே’ 173. பி - ம். ‘முலைச்’ 177. “மருவுறா ததற்குரைக்கும் வடிவமில்லை யென்னவோ, கருவுறாம லாளவந்த கருணைமேனி கண்டுமே” அஞ்ஞவதைப். |