| கனவு | | 238. | இவ்வண்ணம் பலகூளி யெடுத்தியம்பச் சிலகூளி மெய்வண்ணம் விளைந்தகுறி விமலைதனக் குரைசெயுமால். | (14) | | | | 239. | ஓரி எண்டிசைமா நிலவரைப்பி னினிதிலங்குஞ் சராசரமாய்க் கண்டபொரு ளத்தனையுங் கனவாகக் கண்டனனே. | (15) | | | 240. | ஆதியுமந் தமுமறியே னறிவதொரு குறியல்லாற் றீதகலும் படிவந்து சேர்ந்தகுறி யொன்றுளதே. | (16) | | | | 241. | மாயமிது வெனவுணரா மயக்கத்திற் குடிபுக்க காயம்விடுத் துயிர்நீங்கக் கண்டுமனங் கலங்கியதே. | (17) | | | | 242. | சொல்லாத பெருந்தகைமைச் சுவர்க்காதி போகமெல்லாம் நில்லாத நிலையென்று நிச்சயமாய்த் தோன்றியதே. | (18) | | | | 243. | தாவாத சமதமங்கண் முதலகுணந் தலைப்படுமே மேவாயா னெனதென்னும் வெறுஞ்செருக்கு விடைகொளுமே. | (19) | | | | 244. | பழிகாட்டு மிருவினைக்கும் பரிபாகம் வந்தெய்த வழிகாட்டுங் குருவிருந்த வழிதேடி மனஞ்செலுமால். | (20) | | | | 245. | விழிநீரு மயிர்ப்புளகு மெய்விதிர்ப்புந் தனிதோன்றப் பழியாத குறியிவைதாம் பலித்ததுபண் டறியேமால். | (21) | | | | 246. | தெருள்புகுந்த வடியர்சிலர் சிறப்பிவையென் றுரைத்தனரே மருள்புகுந்த சிலவலகை மதியாது மயங்கினவே. | (22) | | | | 247. | இவ்வண்ணம் பலகூறி யிறையவடன் றிருப்பாதச் செவ்வண்ண மலர்சூடித் தெருமரா நின்றிடலும். | (23) | | | | 248. | தெருள்பெருகுஞ் சிவஞான தேசிகனாம் புகழ்வேந்தன் பொருகளங்கண் டோரலகை யவணின்றும் புகுந்ததுவே. | (24) | | | | 249. | புகுந்தகடி கடிதுமிகப் புடைபுடைத்து வாய்திறவா மிகுந்தபர பரப்பினொடும் விளித்தழையா நின்றதுவே. | (25) |
238. குறி - நிமித்தம். 243. சமதமங்கள் முதல குணம் - சமம், தமம், உபரதி, திதீட்சை, சமாதானம், சிரத்தை என்பன ; இவை சமாதி ஷட்சம்பத்தி எனப்படும். யான் எனது என்னும் செருக்கு - அகங்கார மமகாரங்கள் ; “யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்” குறள். 245. விதிர்ப்பு - நடுக்கம். 246. தெருள் - தெளிவு. அலகை - பேய். 249. கடி - பேய். |