பக்கம் எண் :

7. பேய் முறைப்பாடு 45

263.

வல்லைவந்து சொன்னபேயை வருகவென் றணைக்குமே
அல்லல்சொன்ன பேயின்வாயி னனலைவையு மென்னுமே.

(39)
   

264.

கவலையின்று கெட்டதென்று கைகள்கொட்டி யாடுமே
சவலையான தாபசோப தளர்வுமற்ற தென்னுமே.

(40)
  

265.

வெள்ளைகொண்ட வுணர்வுசெல்ல மெல்லமெல்ல மெல்லவே
கொள்ளைகொண்ட பசியுலைந்து குலைகுலைந்த தென்னுமே.

(41)
   

266.

என்றுகூறி யுவகையெய்தி யினிதினாடி யாவையும்
நன்றுகூறி வந்தபேயை நணுகிநின்று வினவியே.

(42)
   

267.

அழிவிலாத வஞ்ஞனாம மழியுமா துரந்துவென்
றொழிவிலா னழித்தவண்ண மோதுகென் றுரைக்கவே.

(43)

263. பி - ம். ‘வல்லல்வந்து’

264. பி - ம். ‘தாபசோக சார்வுமற்ற’

267. “மாயைநாம மஞ்ஞனாம மாளுமாறு வந்துநந், நாயனா ர்ழித்த வாறு நவிலுகென்ன நவிலுமே” அஞ்ஞவதைப்.