பக்கம் எண் :

98 பாசவதைப் பரணி

649.

பற்றா திருக்குஞ் சமயமுமப்
      பகுதி யொழுங்கும் பலநெறியும்
முற்றா திருப்ப துன்றிருவாய்
      முகுள மலரா முன்னன்றோ.

(382)
 

வேறு

 

650.

எத்தனையு மவதிபெறா திருக்கையுன தியல்பாமெத்
      தனையி லெம்மை
வைத்தனையத் தனையதனி னிற்பதெங்க ளவதிநின்சீர்
      மதிப்பார் யாரே.

(383)
 

வேறு

 

651.

ஓம்பிடுமிவ் வுடம்பானோம் வாயி லானோம்
      உடனிருந்த கரியானோ முணர்ச்சி தீர்ந்த
மேம்படுபே ருணர்வானோ மெல்லா மானோம்
      வித்தகனே நீபுரிந்த விளையாட் டென்னே.

(384)
  

652.

பொய்யுணர்வங் கென்னவுமங் கதனால் வந்து
      பொருந்துபவ மென்னவுமப் புன்மை தீர்ந்த
மெய்யுணர்வங் கென்னவுநின் றொருநீ தானே
      விளையாடல் புரிவித்த விரகி தென்னே.

(385)
 

வேறு

653.

அல்லல்வெம்பவ வாழிவற்ற வழன்றவீரன தாண்மையைப்
பல்லவாறினி மொழிவதென்னடி பணிமினென்றவர் பணிவரால்.

(386)

649. “சமையா வெந்தச் சமயமுமெச் சடங்குஞ் சவலைத் தனமு மெலாம், அமையா ததுநின் றிருப்பவள மலரா திருக்கு மளவன்றோ” அஞ்ஞ.

650. எத்தனையும் அவதி - எவ்வளவும் எல்லை; “எவ்வளவு மளவு படா திருக்கை யுன்ற னியல்பாகு மெங்களையெவ் வளவின் வைத்தாய், அவ்வளவே யளவாகி யிருக்கை யெங்க ளளவாகு நின்பெருமை யறிவார் யாரே” அஞ்ஞ.

651. கரி - சாட்சி. “கடம்படுமிவ் வுடம்பானோங் கரண மானோங் கண்டிருக்குங் கரியானோங் காட்சி தீர்ந்த, திடம்படுபே ருணர்வானோ மெல்லா மானோந் திருவிளையாட் டிருக்கின்ற செயலீ தென்னே” அஞ்ஞ.

652. பவம் - பிறவி. விரகு - உபாயம். “அஞ்ஞான மென்னவுமங் கதனா னாய வனேகபவ மென்னவுமவ் வயர்வு தீர்ந்த, மெய்ஞ்ஞான மென்னவு நின் றொருநீ தானே விளையாட றோற்றுவித்த விரகீ தென்னே” அஞ்ஞ.