1“பெற்றதற் குவத்தல் பிழம்புநனி யுலர்த்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே.’’ |
எனவும், 2“நிற்ற லிருத்தல் கிடத்த னடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமமே முதலிய வந்தமில் சிறப்பி னாதன மாகும்.’’ |
எனவும், 3“உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை.’’ |
எனவும், 4“பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலைப் புறனே.’’ |
எனவும், | 5“மனத்தினை யொருவழி நிறுப்பது நிறையே.’’ |
எனவும், 6“நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே.’’ |
எனவும், 7“ஆங்கனங் குறித்த வம்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி.’’ |
எனவும் கூறுமாற்றான் அவ்எட்டும் உணரப்படும். இனி இயமத்துள் பொய் என்பது, 8தன்னெஞ் சறிவது பொய்த்தல். கொலை என்பது, 9உயிர்க்குறுகண் செய்தல், களவு
1,2,3,4,5,6,7 இவை, தொல்காப்பியம் பொருளதிகாரம் 165-வது பக்கத்திலிருந்து 166-வது பக்கத்துள்ள மேற்கோள் சூத்திரங்கள். 8திருக்குறள் 293 9திருக்குறள் 261. |