நல்ல ளாகுத லறிந்தாங் கரிய ளாகுத லறியா தோயே” 1 (குறுந்-120) எனவரும். ‘வழி’ என்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவுங் கொள்க. “வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல் அதற்கன்ன ணீங்கு மிடத்து2 (குறள்-1124) இது, மூன்றாங் கூட்டத்தினையுங் கருதலின் ஈண்டு வைத்தார். இது முதலாகப் பாங்கற் கூட்டமாம். ‘கலங்கலும்’ எனவே அக்கலக்கத்தான் நிகழ்வனவெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை நினைத்தலும் அக் கலக்கங் கண்டு பாங்கன் வினாவுவனவும் அதுவே பற்றுக் கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம். (உ-ம்) பண்டையை யல்லைநீ யின்று பரிவொன்று கொண்ட மனத்தை யெனவுணர்வல்-கண்டாயா னின்னுற்ற தெல்லா மறிய வுரைத்தியாற் பின்னுற்ற நண்பினாய் பேர்த்து”3 எனவும், “வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த் தஞ்சந் தமியனாய்ச் சென்றேனென்-னெஞ்சை நலங்கொண்டார் பூங்குழலா ணன்றாயத் தன்றென் வலங்கொண்டாள் கொண்டா ளிடம்”4 எனவும், (திணை மாலை-9)
1. கருத்து: நெஞ்சமே! நம் காதலி நல்லவள் என்பதை நீ அறிந்தது போல அடைதற்கு அரியவள் என்பதை அறியாயினாய். அதனால் வறியவன் உலக இன்பத்தை விரும்பினாற்போல் அவளை அடைய விரும்பினாய். அது நடவாது. 2. கருத்து: உடன் இருக்கும் போது உயிர்க்கு வாழ்தல் ஆகிய அத்தன்மையுடையள்; விட்டு நீங்கும் போது அவ்வுயிர்க்குச் சாதல் அத்தன்மையள். 3. கருத்து: பின்னிப் பிணைந்த நட்புடையாய்! நீ முன் போல் இல்லை. துன்பம் ஒன்றுடைய மனத்தனாய் உள்ளாய் என்பதை உணர்ந்தேன். நினக்குற்ற துயரெல்லாம் யான் அறிய பெயர்த்து உரைப்பாயாக. 4. கருத்து: அம்புபட்ட மான் ஒன்று இவ்வழி வந்ததோ என்று ஒரு வினாவை விடுத்துச் சென்றேன். தன் |