களவொழுக்கம் ஆமாறு உணர்த்துகின்றது.
தலைவனும் தலைவியும் முதல் முதலில்
ஒருவரையொருவர் காணும் காட்சி பற்றிக்
கூறுகின்றது.
ஐயம் நிகழும் இடம் உணர்த்துகின்றது.
ஐயப்பட்ட தலைவன் துணிதற்குக் கருவி
உணர்த்துகின்றது.
உள்ளக் கருத்து அறிய கருவி உணர்த்துகின்றது.
காதலர் இருவரும் ஒருவர் குறிப்பை மற்றவர்
குறிப்பு ஏற்றுக் கொண்ட பின்னரே
களவொழுக்கம் நிகழும் என உணர்த்துகின்றது.
பெருமையும் உரனும் என்பன தலைவனின்
குணங்கள்.
அச்சம் நாண் மடன் என்பன
தலைவியின் குணங்கள்
களவொழுக்கத்தில் இயற்கைப்
புணர்ச்சி முதலியவற்றுக்கு முன்னர்
நிகழும் இருவரின் உணர்வுகளைக்
கூறுகின்றது.
இயற்கைப் புணர்ச்சிக்கு உரியதோர்
திறன் கூறுகின்றது.
களவிற் கூட்டம் நான்கிலும் தலைவன்
கூற்று நிகழ்தலும், காதல் மிக்கு
ஆற்றாமை மிக்கவிடத்து அவன்
மடன்மா கூறுதலும் கூறுகின்றது.
இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று
நிகழுமாறு கூறுகின்றது.
பாங்கன் துணையாகக் கூடும் கூட்டம்
பன்னிரண்டு வகை என்று கூறுகின்றது.
மேற்கூறியபன்னிரண்டுவகையிலும்
கைக்கிளைப்பாற்படுவன உணர்த்துகின்றது.
மேற்சொல்லப்பட்டவற்றுள் பெருந்திணைக்
குரியன உணர்த்துகின்றது.
அப்பன்னிரண்டனுள் இடையில் நின்ற
ஐந்தும் அகன் ஐந்திணைப்பாற்படும்
என்று கூறுகின்றது
தோழியிற்கூடிய தலைவனுக்கு உரிய கிளவி
கூறுகின்றது.
தலைவனைக்கண்ணுற்ற வழிவரும்
தலைவிக்கு உரிய களவி கூறுகின்றது.
கருமநிகழ்ச்சிக்கண்நாணும்
மடனும்தம்தன்மை திரிந்துவரும்
என்று கூறுகின்றது.
தலைவிமாட்டு ஒரு கூற்றுச்சொல்
நிகழுமாறு உணர்த்துகின்றது.
இயற்கைப்புணர்ச்சி முதலாகக்
களவின் கண் தலைவிக்குக்கூற்று
நிகழும் இடம் உணர்த்துகின்றது.
இதுவும் தலைவிமாட்டுச்சொல்
நிகழுமிடம் உணர்த்துகின்றது.
நாணத்தினும் கற்புச்சிறந்தது என்று
கூறுகின்றது.
களவொழுக்கத்தின் கண் தோழிக்குரிய
கிளவியெல்லாம் தொகுத்துஉணர்த்து
கின்றது.
செவிலிக்குரிய கிளவி உணர்த்து
கின்றது.
நற்றாய்க்கு உரியதோர்
இலக்கணம் உணர்த்துகின்றது.
நற்றாயும் செவிலியும் புணர்ச்சி நிகழ்ந்துள்ளமை
துணியுமாறு உணர்த்து
கின்றது.
தலைவிதன் வேட்கையைத்தலைவன்
முன் உணர்த்தமாட்டாள் என்பது
உணர்த்துகின்றது
களவிற்புணர்ச்சிபாங்கன், தோழி
ஆகியோர் இன்றியும் தாமேயும் நிகழும்
என்பது கூறுகின்றது.
இயற்கைப்புணர்ச்சிக்கண் குறியிடம்
தலைவியே கூறுவாள் என்பது உணர்த்து
கின்றது.
இயற்கைப்புணர்ச்சி தோழியின்
மூலமும் முடியும் இடமும் உண்டுஎன்று
கூறுகின்றது.
பாங்கற்கூட்டம் நிகழுமிடம் உணர்த்து
கின்றது.
தன்தோழியைச்சுட்டிக்கூறுதல்
தலைவியே என்று உணர்த்துகின்றது.
களவில்நற்றாயினும் சிறப்பானஇடம்
செவிலித்தாய்க்கே உண்டு என்று
உணர்த்துகின்றது.
தோழிசெவிலியின் மகளே என்று
கூறுகின்றது.
தோழிசூழ்தலுக்கும், தலைவிசூழ்ச்சிக்கு
உசாத்துணையாகவும் அமைவாள் என்று
கூறுகின்றது.
தலைவனுடன் புணர்ச்சி நிகழ்ந்தமையைத்
தோழிஅறியும்திறம் கூறுகின்றது.
இருவரின் அன்புடைமையை அறிந்தபிறகு
தோழிகூட்டத்திற்கு முயலுவாள்என்று
கூறுகின்றது.
தலைவியைத்தோழியர் கூட்டத்தினின்றும்
பிரித்துத்தனி நிறுத்தி அவர்களைக்கூட்டு
வித்தல் தோழியின் கடமை என்பது கூறு
கின்றது.
குறியிடம்பகற்குறி ,இரவுக்குறிஎனஇரு
வகைப்படும் என்பது கூறுகின்றது.
இரவுக்குறிமனைக்கும், எயிலுக்கும் இடைப்
பட்டஇடமாகவும், மனையோர்பேசும்
கிளவிகேட்கும் அணிமைத்தாகவும் அமையும்
என்று கூறுகின்றது.
பகற்குறியானது தலைமகன் அறிந்துவரும்
இடமாகஎயிற்புறத்தில் அமையும் என்று
கூறுகின்றது.
இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளைத்
தலைவன் செய்த அடையாளங்களாக
எண்ணித்தலைவி ஏமாற்றம் அடைவதும்
உண்டு என்பது உணர்த்துகின்றது.
கற்புக்காலத்தில் நிகழும் ஒழுக்கம்களவிலும்
ஓரளவு தலைவிமாட்டு உண்டு என்பது
கூறுகின்றது.
களவுக்காலத்தில் தீயலுரையும் தீயநாளும்
தலைவியைத்துறந்து ஒழுகும்நிலை
தலைவனிடம் இல்லை என்று கூறுகின்றது.
ஆற்றின் அருமை குறித்துமனன் அழிவதோ,
அஞ்சுவதோதலைவனிடம் இல்லை என்பது
உணர்த்துகின்றது.
களவுப்புணர்ச்சியைத் தந்தையும்,தமையன்
மாரும்குறிப்பாகத்தான் உணர்வார்.கூற்றி
னால்யாரும்கூறமாட்டார்என்பது
கூறுகின்றது.
களவொழுக்கம் உணர்ந்தபொழுது நற்றாய்ச்
செவிலியைப் போல வருந்துவளேயன்றித்
தந்தையும் தமையன்மாரும் போலசினங்
கொள்ளமாட்டாள் என்பது கூறுகின்றது.
அம்பலும் அலரும் தலைவனால் தான்
உண்டாகி களவு வெளிப்படும் என்பது
உணர்த்துகின்றது.
களவுவெளிப்பட்டபின்மணம்நிகழ்த
லும்,களவுவெளிப்படா முன் மணம்நிகழ்தலும்
உண்டுஎன்பதுஉணர்த்துகின்றது.
ஓதற்பிரிவு,பகைவயிற்பிரிவு,தூதிற்
பிரிவுஆகியவைமணத்திற்குமுன்நிகழா
என்பதுஉணர்த்துகின்றது.