“புலிப்போத் தன்ன புல்லணற் காளை.” (பெரும்பாண். 138) எனவும் இவையும் இளமைக் குறிப்பினவாகலிற் காட்டப்பட்டன. மற்று, ஓரறிவுயிர் ஈண்டுக் கூறியதென்னையெனின்,--குழவிப்பெயர் அதிகாரப்பட்டமையானென்பது. மற்றுப் புல்லும் மரனும் 1உயிரெனப்படுமோ வெனின்,--அவற்றை யுயிரென்றன் மரபுபட்ட வழக்காகலின் அம்மரபுங் கோடற்குக் கூறினான், ‘மரம் 2உய்ந்தது’ என்பவாகலின். (24) [மேற் சூத்திரத்துட் கூறிய பெயர்களை நெல்லும் புல்லும் பெறா எனல்] | 580. | நெல்லும் புல்லு நேரா ராண்டே. |
இது, எய்தியது விலக்குகின்றது. இ--ள் : அந்நான்கு பெயரானும் நெல்லும் புல்லுஞ் சொல்லப்படா என்றவாறு. மற்று, “புறக்கா ழனவே புல்லென மொழிப” என்னுமாகலான் மேற்காட்டிய கமுகு முதலாகிய புல்லும் விலக்குண்ணும் பிறவெனின்,--அற்றன்று; புல்லென்பது பலபெயரொருசொல்லாகலான் நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் 3புல்லென்பது(புறம். 248)உணவின்மேற் கொள்க. (25) [இளமைப்பெயர் அவைஅன்றி இல எனல்] | 581. | சொல்லிய மரபி னிளமை தானே சொல்லுங் காலை யவையல விலவே. |
இது, புறனடைச் சூத்திரம்.
1. உயிரெனப்படுமோவெனின் என வினாவினமையால் உயிரன்று எனக் கூறுவாருமுளர் என்பது பெறுதும். 2. உய்தல்--பிழைத்தல். (உயிர் நிலைத்தல்.) 3. புல்--இது நெற்போன்றதொரு சாதிப் பெயர். அதன் தானியத்தைப் புற்றானியமென்றும் அரிசியைப் புல்லரிசியென்றும் வழங்குதலாலறிக. வேறுபடுத்தென்றது புல்லென்னும் பொதுப்பெயரின் வேறுபடுத்துச் சிறப்புப்பெயராகக் கொள்க; அது நெல்லோடு இனம் சேர்த்தி எண்ணினமையாற் பெறப்படுமென்றபடி. உணவு--உணவுக்குரியது. |