பக்கம் எண் :

636மரபியல்

[மேற்கூறிய இளமைப் பெயர்களுள்
ஓரறிவுயிர்க்குரியன இவை எனல்]

579. பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே.

இ--ள் : பிள்ளை குழவி கன்று போத்தென்னும் நான்கும் ஓரறிவுயிரின் இளமைப்பெயர் என்றவாறு.

ஓரறிவுயிரென்பன, முன்னர்ச்(582)சொல்லப்படும். ஓரறிவுயிரென்பது, 1பண்புத்தொகை.

‘கமுகம்பிள்ளை’, ‘தெங்கம்பிள்ளை’

எனவும்,

“வீழி றாழைக் குழவித் தீநீர்.”

(பெரும்பாண். 357)

எனவும்,

‘பூங்கன்று’

எனவும்,

‘போத்துக்கால்’

எனவும் வரும்.

வீழிறாழையெனப்பட்டது, தெங்கு; போத்துக்காலென்பது கரும்பு.

ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும்; அவை,

“குழவிவேனில்”

(கலி. 36)

எனவும்,

“குழவித்திங்கள்.”

(கலி. 103; சிலப். 2: 38)

எனவும்,

“குழவிஞாயிறு.”

(பெருங். 1-33: 29)

எனவும்,

“பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து.”

(அகம். 36)

எனவும்,


1. ஓரறிவுயிர்--ஓரறிவாகிய உயிர் என விரிதலின் பண்புத்தொகையென்றார். அவை மரம் முதலிய பரிச உணர்ச்சி மாத்திரம் உடையன.