பக்கம் எண் :

648மரபியல்

598. மயிலு 1மெழாலும் பயிலத் தோன்றும்.

இ--ள் : போத்தென்னும் பெயர் இப்பதின்மூன்று சாதியின் ஆண்பாற்குமுரியது என்றவாறு.

‘மற்றிவையெல்லாம்’ என்றதனால், பன்றியும் ஓந்தியும் முதலாயினவுங் கொள்ளப்படும். நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பென்பன--சுறாவும் முதலையும் இடங்கருங் கராமும் வராலும் வாளையுமென இவை.

‘பயிலத் தோன்றும்’ என்றதனானே, நாரை முதலியனவுங் கொள்க. மற்றிவை பயிலத் தோன்றுமெனிற் சூத்திரம் வேறுசெய்ததென்னை? முதற் சூத்திரத்துள் எண்ணுக பிறவெனின்,--இவை பறவையுட் பயிலத் தோன்றுமாகலின் வேறோதினானென்க.

2“எறிபோத்து,” 3“உழுபோத்து.” “எருமைப்போத்து.”

எனவும்,

“புலிப்போத் தன்ன புல்லணற் காளை.”

(பெரும்பாண். 138)

எனவும்,

“மரைப்போத்து.”

எனவும்,

4“கவைத்தலை முதுபோத்து காலி னொற்றி
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி.”

(குறுந். 213)

எனவும் வரும்.

‘எல்லாம்’ என்றதனால், ‘பன்றிப்போத்து’ எனவும் வரும்.

“முதலைப் போத்து முழுமீ னாகும்.”

(ஐங்குறு. 5)

எனவும்,

“பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து.”

(அகம் 36)

எனவும்,


1. எழாஅல்--வல்லூறு. “எழாலுற வீழ்ந்தென” (குறுந். 151).

2. எறிபோத்து--குத்தும்போத்து=ஆனேறு.

3. உழுபோத்து--ஆனேறு. எருமைப்போத்தையு முணர்த்தும்.

4. இப்பாடம் டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் வேறாகக் காணப்படுகிறது.