பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை151

சொல்லும், ஆடும், மென்மெல இயலும்,
கணைக்கால் நுணுகிய நுசுப்பின்
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே. ”

என்ற பழம் பாட்டுக்கள், காதலிற் கலந்தாரின் ஒருமையுணர்ச்சியை வலியுறுத்தும்.

அவ்வாறு ஒன்றுபட்ட காதற்றலைமக்கள், தம்முள் வேறாயினார்போல ஒருவரையொருவர் பெயர்கூறி யளவளாவுதல் தம் காதற்செவ்விக் கியையாதாகலானும், அதுவேயுமன்றி ஒத்த அன்புக்கு இன்றியமையாத நன்கு மதிப்பைப் பிறர்போல் தம்முள் பெயர்சுட்டி அழைப்பது வளர்க்குமாறில்லை யாகலானும், தலைப்படுங்கால் ஒன்றிய காதலர் தம் உளத்துவளர் காதல் கமழும் மொழிகளால் ஒருவரையொருவர் பாராட்டுவதன்றிப் பெயர்சுட்டியளவுதல் மெய்க்காதற் குறியன்றாகலானும், அவ்வுணர்வியலுக்கேற்பப் புலனெறி வழக்கில் தலைமக்கள் ஒருவரையொருவர் அன்பொழுக்கத்தில் தம்முட் பெயர்சுட்டி அளவுதல் மரபன்றென இதில் வற்புறுத்தப்பட்டது.

இதுவும் இதனையடுத்த கீழ்ச்சூத்திரமும் அகப்பகுதி அனைத்திலும் தலைமக்கள் பெயர்கூறப் பெறாமையே மரபெனக் கூறுங் குறிக்கோளுடையன போலக்கொண்டு, உரைகாரர் இவ்விரண்டிற்கும் வெவ்வேறு பொருள் கண்டனர். யாண்டும் பெயர்கூறாமையே தொல்காப்பியர் கருத்துமாமேல், “மக்கள் நுதலிய அகனைந்திணையுள், தலைவனும் தலைவியும் பெயர்கூறப்பெறார்” என்று இதனிலும், “அகத்திணை மருங்கில் வழக்காறில்லை” என்றடுத்த பின் சூத்திரத்திலும் தெளியவிளக்கி விலக்கியிருப்பர். ‘அகத்திணை ஏழனுள்’ அல்லது ‘அகத்திணை மருங்கில்’ என்னாது, ‘அகனைந்திணையும்’ என்றும், ‘தலைவனும் தலைவியும் பெயர்கூறப் பெறார்’, அல்லது ‘யாண்டும் கிழவோர் பெயர்கூறப் பெறார்’ என்னாமல், “சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்” என்று இச்சூத்திரத்திலும், “அகத்திணை மருங்கில் வழக்காறில்லை” என்னாமல், “அகத்திணை மருங்கின் அளவுதலிலவே” என அடுத்த கீழ்ச் சூத்திரத்திலும் தொல்காப்பியர் கூறிப்போந்ததால், அவர்க்கது கருத்தன்மை தேற்றமாகும்.

(1) ஒத்தகாதற் றலைமக்கள் அன்பளவுதலில் தம்முள் பெயர் சுட்டாராகையால் ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்’