பக்கம் எண் :

18நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

பல்லித ழுண்கண் கலுழ
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே”

எனும் நற்றிணை (241ஆம்) பாட்டில், பின் பெயலாகிய கூதிர்கழிந்தபின் முன்பனிப்பருவ யாமப் பொழுது குறிஞ்சியாகிய கூடற்குரிமையும் பிரிவருமையும் ஆதலறிக. “கொண்டலாற்றி” எனும் நற்றிணை (89ஆம்) பாட்டில்,

“. . . மாமழை
அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடைநாள்
இரும்பனிப் பருவத்து . . . . .
இன்னும் வருமே தோழி, வாரா
வன்க ணாளரோ டியைந்த
புன்கண் மாலையும் புலம்புமுந் துறுத்தே”

என்பதுமது. இதில் வழிபெயற் கடைநாள் இரும்பனிப்பருவம் எனவே, பின்பெயற் கூதிர்கழிந்த முன்பனி எனத் தெளிக்கப்பட்டது.

சூத்திரம் : 8 
 வைகுறு விடியல் மருதம்; எற்பாடு
நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும்.

கருத்து : இது, மருதம் நெய்தல் திணைகளுக்குப் பருவமும் பொழுதும் குறிக்கின்றது.

பொருள் : வைகுறு விடியல் மருதம் = பொழுது புலராத இரவினிறுதிப் பகுதியான வைகறையென்னும் சிறுபொழுதும் பொழுதுபுலர்ந்து எல்லெழுங் காலையான விடியலென்னும் சிறுபொழுதும், மருதத்திணைக்குச் சிறந்தனவாகும்; எற்பாடு நெய்தலாதல் மெய்பெறத்தோன்றும் = சுடர்படும் பகற்கால மூன்றாம் பகுதியாகிய சிறுபொழுது நெய்தற்றிணைக்கு உரியபொழுதாதல் பொருள்பெறத் தோன்றுவதாகும்.

குறிப்பு : இதில், “வைகுறிள வேனில் மருதம்” என்னும் பாடம் மருதத்திணைக்குப் பொழுதும் பருவமும் வழுவாதுரைக்கு