பக்கம் எண் :

294நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னுக பெருமநீ நிலமிசை யானே. ”

- புறம். 6

(3)   புறநிலை வாழ்த்துப் பாடாண் செய்யுள் :

(அ) “திங்க ளிளங்கதிர்போற் றென்றிங்க ளூர்த்தேவன்
மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து - திங்கட்
கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப
நிலைபெற்று வாழியரோ நீ”
 - பழைய பாட்டு
(ஆ) “இமையா முக்க ணிலங்குசுடர் பயந்த
உமையொரு பாகத் தொருவன் காப்பநின்
பல்கிளைச் சுற்றமொடு நல்லிதி னந்தி
நீபல வாழிய, வாய்வாட் சென்னி!நின்
னொருகுடை வரைப்பி னீழல் பெற்றுக்
கிடந்த வெழுகட னாப்பண்
அகலிரு விசும்பின் மீனினும் பலவே. ”
 - சூத். 422, நச். உரைமேற்கோள்

(4)  கைக்கிளைப் பாடாணுக்குச் செய்யுள் :

(அ) “இனத்தோ டினஞ்சேரு மென்னுஞ்சொ லுண்மை
 மனத்துறைக்க வைத்தாய் மடவோய் - பனைத்தோணின்
 கண்ணிருவேல் கண்டதுமென் கைவேல் கழலுமெனின்
  எண்ணுவதென் நீயருளா யேல்”
(ஆ)“நைவாரை நல்லார் நலிவரோ? நாளுமருள்
 செய்வார், சிரியார் சிறியார்போல்; தெய்வ
 எழிலோய்! தொழுதேற் கிரங்குவதுன் பண்பின்
 வழியால் மறவாயென் மாட்டு”

இவ்வெண்பாக்களில், காமஞ்சாலா இளமையோள்வயிற் காதல்கொண்ட தலைவன் அவளிளமையு மழகும் பாராட்டுதலாலிவை பாடாணாதலறிக.