தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 299 |
மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம்” - நச். உரைமேற்கோள் (ஆ) | “பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள் சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு” | | - மதுரைக்காஞ்சி, வரி : 618 - 619 |
(4) சிறந்த கீர்த்தி மண்ணு மங்கலமும் = முடிபுனைந்த விழவின் நீராட்டு மங்கலமும்; [வடநூல்களிலும் இது “பட்டாபிசேக உத்சவம்” எனப்பாராட்டப்படுகிறது] இதற்குச் செய்யுள் “மணிமுடி தான்சூடி வழுதியர்தென் கூடல் அணியா தனமிவர்ந்த வன்னாள் - பணியணியான் தாணினைந்து நீராடித் தாள்பணிவார் தார்மன்னர், வேணவெலா மீந்துவக்கும் வேந்து” (5) நடைமிகுத் தேத்திய குடைநிழல் மரபும் = உலகிய லொழுக்குயர்த்தும் புகழ்பெற்ற வேந்தனது குளிர்ந்த குடைநிழல் முறைமையும்; அதற்குச் செய்யுள் : (அ) | “அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானைப் புறநீர்போன் முற்றும் பொதியும் - பிறரொவ்வா மூவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் மாறன் குடை” |
(ஆ) | . . . . . . . . . . . . . . . . . முரசு முழங்கு தானை மூவருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும! . . . . . . . . . . . . . . . . . ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி நடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை |
|