300 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ! - புறம். 35, வரி ; 4 - 21 (6) மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் = பகைவர்பால் கொற்றங் கருதி கொண்டாடும் வாள்நீராட்டு மங்கல விழாவும்; அதற்குச் செய்யுள் : “பார்தாங்குந் தண்குடையான் பாண்டியன்வாள் பற்றலரின் தார்தாங்கு மார்பிளக்கத் தாக்கியசெந் - நீர்முடையை நீராட்டி நீக்கிநறு நெய்யணிநன் னாள்விழவைப் பாராட்டு மாறன் படை” (7) மன்னெயிலழித்த மண்ணுமங்கலமும் = நீண்டு நிலைத்த பகையரணெறிந்து பாழ்செய்து நீராடும் மற விழவும்; அதற்குச் செய்யுள் : (அ) | “கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்” | | - புறம். 15 |
(ஆ) | “. . . . . . . . . . . . . செற்றோர் கடியரண் தொலைத்த கதவுகொள் மருப்பின் முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றாள் உகிருடை யடிய ஓங்கெழில் யானை வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் தூறிவர் துறுகற் போலப்போர் வேட்டு, வேறுபல் பூளையொ டுழிஞை சூடி . . . . . . . . . . . . . . . . . . முனைகெடச் சென்று முன்சம முருக்கித் தலைதவச் சென்று தண்பணை யெகுப்பி, வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் கராங் கலித்த கண்ணகன் பொய்கைக் கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் |
|