பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை367

“நிறையுடையே னென்பேன்மன் யானோவென் காம
 மறையிறந்து மன்று படும்”

(குறள். 1254)

என வரும் பாக்களும் காதல் கைம்மிகல் காட்டி நின்றன.

கட்டுரையின்மை:

“கையி னாற்சொலக், கண்களிற் கேட்டிடும்
 மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்”

(சிந்தா. 997)

எனும் குணமாலைகூற்றில், கழிகாதலால் உரையறுதல் காண்க.

இன்னும்,

“. . . . . . . . . . . துறைவன்
 குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்
 றறியாற் குரைப்பலோ யானே”

(குறுந். 318)

எனவும்,

“மெல்லிய விளிய மேவரு தகுந
 இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
 மறத்தியோ வாழியென் னெஞ்சே”

(குறுந். 306)

எனவும் வருவனவற்றிலும் தலைவி உரையறும் குறிப்பறிக.

சூத்திரம் : 24 
 தெய்வம் அஞ்சல், புரையறந் தெளிதல்
இல்லது காய்தல், உள்ள துவர்த்தல்,
புணர்ந்துழி யுண்மைப் பொழுதுமறுப் பாக்கம்,
அருள்மிக வுடைமை, அன்புதொக நிற்றல்,
பிரிவாற் றாமை, மறைந்தவை யுரைத்தல்,
புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇச்
சிறந்த பத்தும் செப்பிய பொருளே.

கருத்து : இது வரைந்துடன் வாழும் கற்புக் காதலுக்குரிய மெய்ப்பாடுகள் கூறுகின்றது.