பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை405

தமிழ்ச்சான்றோர் இருபாலோர்க்கும் இயல்பாகும் ஐயம் ஏற்புழிக் கூறுதலானும், அவருரை தவறென்றறிக. காதற்காட்சியில் இருவருக்கும் போதரும் ஐயம் கூறும் பாட்டு வருமாறு :

1.“செம்மல ரடியும் நோக்கித் திருமணி அல்குல் நோக்கி
 வெம்முலைத் தடமும் நோக்கி விரிமதி முகமும் நோக்கி
 விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி,
 ‘மைம்மலர்த் தடங்கண் நங்கை மரைமலர்த் தேவி’ என்றான்”
 (சிந்தாமணி : 739)
2. “வரையின் மங்கைகொல், வாங்கிருந் தூங்குநீர்த்
 திரையின் செல்விகொல், தேமலர்ப் பாவைகொல்,
 உரையின் சாய லியக்கிகொல், யார்கொலிவ்
 விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே”
 (சிந்தா. 1326)
3. “விண்ணி னீங்கிய மின்னுரு இம்முறை
 பெண்ணின் நன்னலம் பெற்றதுண் டாங்கொலோ.
 எண்ணி னீதல தென்றறி யேன், இரு
 கண்ணி னுள்ளும் கருத்துளுங் காண்பெனால்”
 (கம்பன். மிதிலைக்காட்சி. 135)
4. “வள்ளற் சேக்கைக் கரியவன் வைகுறும்
 வெள்ளப் பாற்கடல் போன்மிளிர் கண்ணினாள்
 அள்ளற் பூமக ளாகுங் கொலோ? என
 துள்ளத் தாமரை யுள்ளுறை கின்றதே”
 (கம்பன். மிதிலைக்காட்சி, 136)

இந் நான்கு பாக்களும், தலைவன் ஐயுறவுகூறும். முதலிரண்டும், சீவகன் முறையே தத்தையையும், பதுமையையும் முதற்கொண்டு கூறியவை. பின்னிரண்டும் இராமன் சீதையை யாரென அறியாமல் முதலிற் கண்டு காதலாற் கூறியன.

5. “அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
 மாதர்கொல்? மாலுமென் நெஞ்சு”
 (குறள்: 1081)

என்ற குறளும் தலைவனதையமே கூறுகிறது.

1. “கண்ணெனும் வலையி னுள்ளான், கையகப் பட்டி ருந்தான்.
பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப் புடைய நம்பி,