408 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இழையா (செய்யா) அணியே யாதலின், இழை ஐயமகற்றுங் கருவியாகும். வள்ளி, சந்தனக்குழம்பால் மார்பிலிடுங்கோலமாதலின், அதுவும் தேவர்க்கில்லை. பூ, தேவருலகிலுள்ளது, வாடாது; வாடுமலர்கள் மாந்தர் பாலது. கண், மக்களது அகத்தியல் நிழற்றும் முகத்தொளிர் விளக்கு; தேவர்விழி, உள்ளுணர் வொளித்துப் புறநிகழ்வு கொள்ளும் கள்ளவழியேயாகும் (பொறிச்சுருங்கை) அலமரல்நாண், மடம், பற்றி உளம்தடுமாறல்; தேவர்க்கஃதின்மையின், அதுவும் குறியாயிற்று. இமைத்தல், மக்கள் விழிக்கியல்பு; இமையா நாட்டம் அமரர்க்கமையும். ஆதலினதுவும் குறியாயிற்று. அச்சம், புதுமையிற் பிறக்கும் உளநடுக்கும், அதன் புறக்குறியும் ஆம். அதுவும் அமரர்பாலறியப்படாமையின், மக்கட்குறியாயிற்று. இனி, “அன்ன பிறவும்” என்றது, அடிநிலந்தோய்தல், வியர்த்தல், நிழலாடுல், போல்வன மாந்தர்க்கன்றித் தேவர்க்கின்மையின், அவையும் மக்களியலுக்கு அறிகுறியாகும். 1. | “மாலை வாடின, வாட்கண் இமைத்தன, காலும் பூமியைத் தோய்ந்தன, காரிகை பாலின் தீஞ்சொற் பதுமையிந் நின்றவள் சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே” | | (சிந்தா. 1334) |
2. | “திருநுதல் வேரரும்பும், தேங்கோதை வாடும், இருநிலம் சேவடியும் தோயும் அரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கும், ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே” | | (புறப்பொருள் வெண்பாமாலை கைக்கிளை. 3) |
3. | “பாயும் விடையரன் தில்லையன்னாள் படைக்கண் ணிமைக்கும் தோயும் நிலத்தடி, தூமலர் வாடும், துயர மெய்தி ஆயு மனனே! அணங்கல்லள், அம்மா முலைசுமந்து தேயு மருங்கற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. ” | | (திருக்கோவை. செய். 3) |
சூத்திரம் : 5 | | | நாட்ட மிரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும் |
|