பக்கம் எண் :

 461

 [குறிப்பு : நாவலர் ச. சோ. பாரதியார், இந்நூலை 1942இல், வெளியிட்டபோது, இதனைச் செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரவர்கட்குக் கையுறையாய் உரித்தாக்கியுள்ளார். அஃது இங்கே தரப்படுகின்றது. ] 

மாட்சிமிக்க செட்டி நாட்டு மன்னர்,

உயர் திருவாளர்

டாக்டர் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார்

அவர்களுக்கு

இப்புறத்திணையியற் புத்துரையைப்
பாராட்டுக் கையுறையாய் உரித்தாக்கும்

வாழ்த்துப்பா

1. திருவினாலத் திருவையொத்த அறிவினாலு மொருவனாய்க்
கருவில்மன்னு திருமணந்த கற்பகத்தி னுற்பவன்,
பொருவிலாத புகழினோடு புவியிலென்று மன்னனாய்
மருவிவாழு மாட்சியுற்று வழியினோர்க்கும் நல்கினோன்.
2. ஆளுமன்னர் மரபினோர்தம் அறிவிலாத சிறுமையால்
நாளும்வீ றிழந்துவீழ, நன்றுசூழு மறிவுசெவ்
வேளுமெஞ்சு வினையையாளும் விறலினாலிப் புவியெலாம்
நீளும்நல்ல புகழுமன்னர் நிலையுமன்ன நிறுவினோன்.
3. இகன்மையற்ற வியல்பினால்நல் லின்சொலீர மளைஇஒண்
முகனமர்ந்து முறுவலோடு சிலசொலுந் திறத்தினால்
தகவளந்து தாழ்விலாமற் சார்வுதீரத் தருதலால்
இகபரத்தி றப்பிலாச் சிறப்பையென்று மெய்தினோன்.
4. இன்னல்யாவு மடமையா லிங்கெழுவ தென்றுணர்ந்தது
துன்னலா தொழித்திடத் துணிந்தண்ணா மலைப்பெயர்
மன்னமக்க ளறிவுசால்நல் வாழ்வுறத்தன் நிதியினாற்
பன்னரும்பல் கலைகளோங்கு கழகமுண்டு பண்ணினோன்.
5. அறத்தினின்ற அசைவிலாத அறிவினல்ல ஆள்வினைத்
திறத்தினின்ற சூழ்ச்சிநன்று தேர்தலொன்று துணிவினாற்
சிறத்தலைத்தன் னுரிமைகொண்ட செம்மல்பாற் றொல்காப்பியர்
புறத்திணைப்புத் துரைபுணர்த்திப் புகழ்புரிந்து போற்றுகேன்.
  
‘மலையகம்’ 
 பசுமலை
ச. சோ. பாரதி.
 10-11-42