பக்கம் எண் :

500 

நாவலர் பாரதியாரின்
வரலாற்றுக் குறிப்பேடு

1879சூலை 27 - நாவலர் பாரதியார் தோற்றம் : இயற்பெயர் :
 சத்தியானந்த சோமசுந்தரன். (தந்தை : எட்டப்ப பிள்ளை.
  தாய் : முத்தம்மாள்)
 
1894(ஏறத்தாழ) மீனாட்சியம்மையாரை மணமுடித்தல்
 
1898மார்ச் 30 - முதல் மகன் இராசாராம் பாரதி பிறப்பு
 
1903பிப்ரவரி 16 - இரண்டாம் மகன் இலக்குமிரதன் பாரதி பிறப்பு
 
1905அக்டோபர் 13 - மகள் இலக்குமி பாரதி பிறப்பு
 
1905சட்டப்படிப்புத் தேர்வு
 
1905-1920தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழில்
 
1905-1919நாட்டு உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக அரசினர்
  ஐயப்பட்டியலில் நாவலர் பெயர்
 
1913எம். ஏ. தேர்வு எழுதி வெற்றி பெறல்
 
1916ஆக. 19 - கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘தசரதன் குறையும்
 கைகேயி நிறையும்’ ஆராய்ச்சிச் சொற்பொழிவு
 
1920தூத்துக்குடியை விட்டு மதுரை வந்து வழக்கறிஞர் பணிபுரிதல்
 
1920மதுரையில் மாநிலக் காங்கிரசு மாநாட்டை நடத்துதல்
 
1926சனவரி 25 - மதுரைத் தமிழ்ச்சங்கம், வாலிபக் கிறித்தவர்
 சங்கம் சார்பில் ‘திருவள்ளுவர்’ ஆராய்ச்சிச் சொற்பொழிவு
 
1926மதுரையில் சி. ஆர். தாசைப் பேசச் செய்தல்
 
1927திசம்பர் 1 - வசுமதி அம்மையாரைத் திருவெட்டாற்றில்
  மணம் புரிதல்
 
1929பிப்ரவரி 28 - மகள் மீனாட்சி பிறப்பு