பக்கம் எண் :

238கலித்தொகை

இதனால், தலைவிக்குச் செல்வமாகிய உவகை பிறந்தது.

இது தரவும் கொச்சகங்களும் கொச்சக 1வெண்பாக்களும் தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்று வந்த கொச்சகக்கலி. (4)

41 பாடுகம் வாவாழி தோழி வயக்களிற்றுக்
கோடுலக்கை யாகநற் சேம்பி னிலைசுளகா
வாடுகழை நெல்லை யறையுரலுட் பெய்திருவாம்
பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபா டுற்று;
5இடியுமிழ்பிரங்கிய விரவுபெய னடுநாட்
கொடிவிடு பிருளியமின்னுச்செய் விளக்கத்துப்
பிடியொடு மேயுஞ்செய்புன் யானை
யடியொதுங் கியக்கங் கேட்டகானவ
னெடுவரை யாசினிப் பணவை யேறிக்
10கடுவிசைக்கவணையிற் கல்கை விடுதலி
னிறுவரை வேங்கையி னோள்வீசிதறி
யாசினி மென்பழ மளிந்தவை யுதிராத்
தேன்செ யிறாஅறுளைபடக் போகி
நறுவடி மாவின் பைந்துணருழக்கிக
15குலையுடைவாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்துட்டங்கு மலைகெழு வெற்பனைப்
பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபாடுற்று;
18இலங்குமருவித் திலங்கு மருவித்தே
வானி னிலங்குமருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை;
21பொய்த்தற்குரியனோ பொய்த்தற் குரியனோ
வஞ்சலோம்பென்றாரைப் பொய்த்தற் குரியனோ
குன்றகனன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றிற்
றிங்களுட்டீத்தோன்றி யற்று;
25 இளமழை யாடுமிளமழை யாடு
மிளமழை வைகலு மாடுமென் முன்கை
வளைநெகிழவாராதோன் குன்று;
28 வாராதமைவானோ வாரா தமைவானோ
வாரா தமைகுவா னல்லன்மலைநாட

(பிரதிபேதம்) 1 வெண்பாக்களும் சுரிதகமும்.