பக்கம் எண் :

246கலித்தொகை

28 (1) வாரா தமைவானோ வாரா தமைவானோ
வாரா 1தமைகுவா னல்லன் மலைநாட
(2) னீரத்து ளின்னவை தோன்றி னிழற் 2கயத்து
(3) ணீருட் குவளைவெந் தற்று.

எ - து: 3நின்னது வாராதே ஆற்றியிருப்பானோ? வாராதே ஆற்றியிருப்பானோ? இருக்குமதுவுமன்றி அம்மலைநாடனுடைய அருளிடத்தே இத்தன்மையவாகிய கொடியவை தோன்றுமாயின் நிழலையுடைய குளத்துள் நீரினின்ற குவளை வெந்த தன்மைத்து; நீ இங்ஙனங் கூறாதேகொள்; எ - று.

நீருட் குவளை வெந்தற்றென்றது மருட்கையுவமம். நிழற்கயத்துள் வேவன இன்மையின் அற்புதமாயிற்று. இஃது உலகநடையிறந்ததோர் உவமை கூறி அதனோடு தலைவன் ஈரத்தினை ஒப்பித்தலிற் பெருமைபற்றி 4வந்தது. இனி அதுகேட்டதலைவி கூறுகின்றாள்.

32 (4) மணிபோலத் தோன்று மணிபோலத் தோன்று
மண்ணா மணிபோலத் தோன்றுமென் மேனியைத்
துன்னான் றுறந்தான் மலை.

எ - து: 5 என்மேனியைச் சேராதே துறந்தவனுடைய மலையாயிருந்தும் நீலமணிபோலத் தோன்றும்; நீலமணிபோலத் தோன்றும்; கழுவாத நீலமணி போலத் தோன்றும்; எ - று.


1. "வாராதமைவானோ..................வெந்தற்று" என்பது உவமப்போலி ஐந்தனுள் கூடாப்பொருளோ டுவமித்தற்கு மேற்கோள்; தொல். உவம. சூ. 24. 'உவம' இளம்.

2. "ஈரத்து...............வெந்தற்று" என்பதனை மருட்கை யுவமத்திற்கு மேற்கோள்காட்டி "நிழற்கயத்திற் குவளைவேவனவின்மையின் இஃது அற்புதமாயிற்று" என்பர், பேராசிரியரும்; தொல். உவம. சூ. 19.

3. பெருமைபற்றி ஒப்புமை கொள்ளப்படு முவமைக்கு 'நீருட்.....................வெந்தற்று' என்பதை மேற்கோள்காட்டி உலகநடையிறந்ததோருவமை கூறி அதனோடு தலைமகன்ஈரத்தினை ஒப்பித்தமையின் இது பெருமை பற்றிய தாயிற்று என்பர், பேராசிரியரும்; தொல். உவம. சூ. 19.

4. (அ) மலை மணிபோலத்தோன்றல்: "மணிமலை" சிறுபாண் 1. (ஆ) "மண்ணுறு மணியிற் றோன்றுந்தண்ணறுந் துறுக லோங்கிய மலையே." குறுந், 367: 6 -7.(இ) "மணிநிறமால்வரை." (ஈ) "மணிநெடுங் குன்றே.” (உ) "மணிநிறங் கொண்ட மாமலைவெற்பின்" ஐங், 208, 201, 224. (ஊ) "மணித்தலைமலை" திருவிளை, மாணிக். 34.

(பிரதிபேதம்) 1 அமைகுவன், 2 கயத்துநீருட், 3 அதுகேட்டதோழி நின்னிடத்து,4 வந்தது மணிபோல, 5 அதுகேட்ட தலைவி என் மேனியை.