பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி257

(43.) வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்
தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதுஞ்
சாந்த மரத்தி னியன்ற வுலக்கையா
லைவன வெண்ணெ லறையுரலுட் பெய்திருவா
மையனை யேத்துவாம் போல வணிபெற்ற
மைபடு சென்னிப் பயமலை நாடனைத்
தையலாய் பாடுவா நாம்;
8தகையவர்கைச்செறித்த தாள்போலக் காந்தண்
முகையின்மேற்றும்பி யிருக்கும் பகையெனிற்
கூற்றம் வரினுந்தொலையான்றன் னட்டார்க்குத்
தோற்றலை நாணாதோன்குன்று;
12 வெருள்புட னோக்கிவியலறை யூக
மிருடூங் கிறுவரை யூர்பிழி பாடும்
வருடைமான்குழவிய வளமலை நாடனைத்
தெருளத் தெரியிழாய்நீயொன்று பாடித்தை;
16நுண்பொறிமான்செவி போல வெதிர்முளைக்
கண்பொதி பாளைகழன்றுகும் பண்பிற்றே
மாறுகொண் டாற்றா ரெனினும்பிறர்குற்றங்
கூறுத றேற்றாதோன் குன்று;
20புணர்நிலைவளகின் குளகமர்ந் துண்ட
புணர்மருப் பெழில்கொண்ட வரைபுரைசெலவின்
வயங்கெழில் யானைப் பயமலை நாடனை
மணநாறு கதுப்பினாய்மறுத்தொன்று பாடித்தை;
24கடுங்க ணுழுவையடிபோல வாழைக்
கொடுங்காய் குலைதொறூஉந்தூங்கு மிடும்பையா
லின்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்காற்
றன்மெய்துறப்பான் மலை;
எனவாங்கு;
29கூடியவர்திறம் பாடவெண் றோழிக்கு
வாடிய மென்றோளும்வீங்கின
வாடமை வெற்ப னளிததக்காற் போன்றே.