பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி297

5புதுவதாக மலர்ந்த வேங்கையை
யதுவென வுணர்ந்தத னணிநல முருக்கிப்
பேணா முன்பிற்றன் சினந்தணிந் தம்மரங்
காணும் பொழுதி னோக்கல் செல்லாது
நாணி யிறைஞ்சு நன்மலை நன்னாட;
10போதெழின் மலருண்க ணிவண்மாட்டு நீயின்ன
காதலை யென்பதோ வினிதுமற் றின்னாதே
மின்னோருங் கண்ணாக விடியென்னாய் பெயலென்னா
யின்னதோ ராரிடை யீங்குநீ வருவதை;
14இன்புற வளித்தனை யிவண்மாட்டு நீயின்ன
வன்பினை யென்பதோ வினிதுமற் றின்னாதே
மணங்கமழ் மார்பினை மஞ்சிவ ரடுக்கம்போழ்ந்
தணங்குடை யாரிடை யீங்குநீ வருவதை;
18இருளுற ழிருங்கூந்த லிவண்மாட்டு நீயின்ன
வருளினை யென்பதோ வினிதுமற் றின்னாதே
யொளிறுவேல் வலனேந்தி யொருவன்யா னென்னாது
களிறியங் காரிடை யீங்குநீ வருவதை;
அதனால்;
23இரவின் வார லைய விரவுவீ
யகலறை வரிக்குஞ் சாரற்
பகலும் பெறுவையிவ டடமென் றோளே.

இது 1நீரிவ்வாறு வருகின்ற வரவு எமக்குத் துன்பத்திற்குக் காரண 2மாகாநின்றதெனக் கூறி இரவுவருவானைத் தோழி பகல் 3வருகவென்றது.

இதன்பொருள்.

(1)கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கிற் றுஞ்சும் (2) யானை


1. யானை புலியைக்கொல்லுமென்பது இந்நூற்பக்கம், 251 : 1-ஆங் குறிப்பால் உணரலாகும்; கொன்று மலையிற் றுயிலுமென்பதை, கலி. 42 : 1- 3-ஆம் அடிகளால் உணர்க. ‘கொடுவரி, பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை; ஆகுபெயருமாம்’ புறம். 135.

2. யானை வேங்கைமரத்தைச் சினங்கொண்டு சிதைக்கு மென்பதனை, (அ) "கதம்வாய் வேழ, மிருங்கேழ் வயப்புலி வெரீஇ யயலது, கருங் கால் வேங்கை யூறுபட மறலிப், பெருஞ்சினந் தணியுங் குன்ற நாட" நற். 217 : 2 - 5.

(பிரதிபேதம்)1 நீஇவ்வாறு, 2ஆய்நின்றதென, 3 வாவென்றது.