அதுவேயுமன்றி (1) நீ அருளைப் பற்றுவிடுவையாயின் நினக்குஅனையவை பயன்றருதலில்லை; 1எ - று. நச்சினோரெனத் தன்னைப் பிறர்போற் கூறினான், நயம் - அருள் அனையவையென்றது, (2) தைந்நீராடன் முதலியவற்றை, இதனால், தலைவற்கு இழிவுபிறந்தது தலைவிக்குச் 2சூழ்ச்சிபிறந்தது, 3இஃது ஒன்பதடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான்கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (23) (60). | சுணங்கணி வனமுலைச் சுடர்கொண்ட நறுநுதன் மணங்கமழ் நறுங்கோதை மாரிவீ ழிருங்கூந்த னுணங்கெழி லொண்டித்தி நுழைநொசி மடமருங்குல் வணங்கிறை வரிமுன்கை வரியார்ந்த வல்குலாய்; | 5 | கண்ணார்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க் குண்ணின்ற நோய்மிக வுயிரெஞ்சு துயர்செய்தல் பெண்ணன்று புனையிழா யெனக்கூறித் தொழூஉந் தொழூதே கண்ணுநீ ராக நடுங்கின னின்னகா யென்செய்தான் கொல்லோ விஃதொத்தன் றன்கட் | 10 | பொருகளி றன்ன தகைசாம்பி யுள்ளு ளுருகுவான் போலு முடைந்து; | 12 | தெருவின்கண், காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாராண வாசிப் பதம்பெயர்த்த லேதில நீநின்மேற் கொள்வ தெவன்; | 15 | அலர்முலை யாயிழை நல்லாய் கதுமெனப் பேரம ருண்கணின் றோழி யுறீஇய வாரஞ ரெவ்வ முயிர்வாங்கு மற்றிந்நோய் தீரு மருந்தருளா யொண்டொடீ; | 19 | நின்முகங் காணு மருந்தினே னென்னுமா னின்முகந் தான்பெறி னல்லது கொன்னே |
1 (அ) "நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற், றேரினு மஃதே துணை" (ஆ) "அருளற்றா ரற்றார்" குறள். 242, 248; (இ) "அறனு மருளுடையான் கண்ணதேயாகும்" (ஈ) "நெகிழ்ந்த வருளினானாகு மறம்" சிறுபஞ்ச. 3, 35. 2. "தைஇத் திங்கட் டண்கயம் படியும், பெருந்தோட் குறுமகள்" (நற். 80 : 7 - 8) எனவருதலும் காண்க. (பிரதிபேதம்)1ஆகலினென்றாள், 2சூட்சி, 3இது ஒத்தாழிசைக்கலி.
|