சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பற்றக் கால் எ - து; பெருமா! நின்னருளால் யாங்கள் 1மனஞ்செருக்கேம்; எம்மிடத்தே விருப்பமுற்றுக் (1) குறைந்தாய்போலேவந்துநின்று நினக்குத் தகுதிப்பாடில்லாதவற்றைச் செய்யாதே நீ விரும்பினாரிடத்து நுகரக்கருதியவற்றைச் செய்து முடித்து ஆண்டுள்ள விருப்பமற்ற இடத்துப் பின்பு எம்மையும் நினைப்பாயென ஊடல் தீர்கின்றாள் கூறினாள்; எ - று. இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது. இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலி. (4) (70) | மணிநிற மலர்ப்பொய்கை மகிழ்ந்தாடு மன்னந்தன் னணிமிகு சேவலை யகலடை மறைத்தெனக் கதுமெனக் காணாது கலங்கியம் மடப்பெடை மதிநிழ னீருட்கண் டதுவென வுவந்தோடித் துன்னத்தன் னெதிர்வரூஉந் துணைகண்டு மிகநாணிப் பன்மல ரிடைப்புகூஉம் பழனஞ்சே ரூரகேள்; | 7 | நலநீப்பத் துறந்தெம்மை நல்காய்நீ விடுதலிற் பலநாளும் படாதகண் பாயல்கொண் டியைபவாற் றுணைமலர்க் கோதையார் வைகலும் பாராட்ட மணமனைத் ததும்புநின் மணமுழவந் தெடுப்புமே; | 11 | அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத லியைபவா னினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் றமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே; | 15 | வாராய்நீ துறத்தலின் வருந்திய வெமக்காங்கே நீரிதழ் புலராக்கண் ணிமைகூம்ப வியைபவா னேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின் றேர்பூண்ட நெடுநன்மான் றெண்மணிவந் தெடுப்புமே; எனவாங்கு; |
1. தாழ்தலென்பது குறைதலென்னும் பொருளில் வருமென்பதை, "தாழ்ந்தான்" "தாழ்ந்து" (சீவக. 1473, 2657) என்பவற்றிற்கு இவர் எழுதியிருக்கும் உரையாலும் அறிக. (பிரதிபேதம்) 1மனச்செருக்கேம்.
|