கண்ணினையுடைய 1பரத்தையர்க்கும் அவர்கள் அகப்படுத்தற்குக் காரணமான வலை இதுவென்று சொல்லி ஊரிலுள்ளார் சேரச் சிரிக்கும்படி திரிதருந்தேர் நின்னினும் பெரிதாகப் பித்தேறிற்று; யான் 2பித்தேறிலேனென்று ஊடினாள். எ - று. தேரென்றது, 3ஆகுபெயராய்ப்பாகனையுணர்த்திற்று. இதனால், இருவர்க்கும்புணர்ச்சியுவகை பிறந்தது. இதுசிறுமைக்கெல்லைகூறிய ஈரடித்தாழிசையான்வந்த ஒத்தாழிசைக்கலி (75.) | (1) நீரார் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் கொண்மார் சீரார் சேயிழை யொலிப்ப வோடு மோரை மகளி ரோதை வெரீஇயெழுந் | 5 | தார லார்கை யஞ்சிறைத் தொழுதி யுயர்ந்த பொங்க ருயர்மர மேறி யமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய் தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்று முயர்ந்த போரி னொலிநல் லூரன் | 10 | புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின் வதுவை நாளால் வைகலு மஃதியா னோவேன் றோழி நோவாய் நீயென வெற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென; |
14 | எல்லினை வருதி யெவன்குறித் தனையெனச் சொல்லா திருப்பே னாயி னொல்லென விரியுளைக் கலிமான் றேரொடு வந்த விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும | 18 | வாடிய பூவொடு வாரலெம் மனையென வூடி யிருப்பே னாயி னீடா தச்சா றாக வுணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்; |
1. இச்செய்யுள் கற்பின்கண் தலைவிகூற்றுப் பெட்பின்கண் வந்ததற்கு மேற்கோள்; தொல். கற்பி. சூ. 6. இளம். நச். (பிரதிபேதம்) 1பரத்தையர்க்கவர்களகப், 2பித்தேறிற்றிலே னென்று, 3ஆகுபெயராந் பாகனை, இதனால்.
|