5 | அன்னையோ, காண்டகையில்லாக் குறணாழிப்போழ்தினா னாண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டுவ லென்று விலக்கினை நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; |
9 | மாண்ட, எறித்த படைபோன் முடங்கி மடங்கி நெறித்துவிட் டன்ன நிறையேரா லென்னைப் பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லே னீநல்கி னுண்டென் னுயிர்; |
13 | குறிப்புக்காண், வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள கடும்பகல் வந்தெம்மை யில்லத்து வாவென மெய்கொளீஇ யெல்லாநின் பெண்டி ருளர்மன்னோ கூறு: |
17 | நல்லாய்கேள், உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லி னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது; |
22 | போசீத்தை,மக்கண் முரியேநீ மாறினித் தொக்க மரக்கோட்டஞ்சேர்ந்தெழுந்தபூங்கொடிபோல நிரப்பமில் யாக்கை தழீஇயினரெம்மைப் புரப்பேமென் பாரும் பலராற் பரத்தையென் பக்கத்துப்புல்லீயா யென்னுமாற் றொக்க வுழுந்தினுந்துவ்வாக் குறுவட்டா நின்னி னிழிந்ததோ கூனின்பிறப்புக் கழிந்தாங்கே யாம்வீழ்து மென்றுதன்பின்செலவு முற்றீயாக் கூனிகுழை யுங்குழைவுகாண்; |
31 | யாமை யெடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங் காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க; |