பக்கம் எண் :

நான்காவது முல்லை629

15சாற்றுள், பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வா யெல்லா
மிடைபெறி னேராத் தகைத்து;
17தகைவகை மிசைமிசைப் பாயிய ரார்த்துட
னெதிரெதிர் சென்றார் பலர்;
19கொலைமலி சிலைசெறி செயிரயர் சினஞ்சிறந்
துருத்தெழுந் தோடின்று மேல்;
21எழுந்தது துக
ளேற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கினர் பலர்;
25அவருள், மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ
யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் றோன்றி
வருத்தினான் மன்றவவ் வேறு;
28ஏறெவ்வங் காணா வெழுந்தா ரெவன்கொலோ
வேறுடை நல்லார் பகை;
30மடவரே நல்லாயர் மக்க ணெருந
லடலேற் றெருத்திறுத்தார்க் கண்டுமற் றின்று
முடலேறு கோட்சாற்று வார்;
33ஆங்கினி,
தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக
பண்ணமை யின்சீர்க் குரவையுட் டெண்கண்ணித்
திண்டோட் டிறலொளி மாயப்போர் மாமேனி
யந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த
முறுவலாண் மென்றோள்பா ராட்டிச் சிறுகுடி
மன்றம் பரந்த துரை.

1இஃது ஆயன் தலைவனாய் ஏறுதழுவினமை 2சுற்றத்தார் கண்டுநின்று கூறியது.

இதன் பொருள்.


(பிரதிபேதம்)1இது, 2சுற்றத்தார்க்கண்டு.