பக்கம் எண் :

636கலித்தொகை

20 படுமழை யாடும் வரையகம் போலுங்
கொடிநறை சூழ்ந்த தொழூஉ;
22தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின வேறு;
24ஏற்றின், அரிபரி பறுப்பன சுற்றி
யெரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்க
ணுருவ மாலை போலக்
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன;
28கோட்டொடு சுற்றிக் குடர்வலந்த வேற்றின்முன்
னாடிநின் றக்குடர் வாங்குவான் பீடுகாண்
செந்நூற் கழயொருவன் கைப்பற்ற வந்நூலை
முந்நூலாக் கொள்வானும் போன்ம்;
32இகுளை யிஃதொன்று கண்டை யிஃதொத்தன்
கோட்டினத் தாயர் மகனன்றே மீட்டொரான்
போர்புக லேற்றுப் பிணரெருத்திற் றத்துபு
தார்போற் றழீஇ யவன்;
36இகுளை யிஃதொன்று கண்டை யிஃதொத்தன்
கோவினத் தாயர் மகனன்றே யோவான்
மறையேற்றின் மேலிருந் தாடித் துறையம்பி
யூர்வான்போற் றோன்று மவன்;
40தொழீஇஇ, காற்றுப்போல் வந்த கதழ்விடைக்காரியை
யூற்றுக் களத்தே யடங்கக்கொண் டட்டதன்
மேற்றோன்றி நின்ற பொதுவன் றகைகண்டை
யேற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டுச்
சீற்றமோ டாருயிர் கொண்டஞான் றின்னன்கொல்
கூற்றென வுட்கிற்றென் னெஞ்சு;
46இகுளை யிஃதொன்று கண்டை யிஃதொத்தன்
புல்லினத் தாயர் மகனன்றே புள்ளி
வெறுத்த வயவெள்ளேற் றம்புடைத் திங்கண்
மறுப்போற் பொருந்தி யவன்;