50 | ஓவா வேகமோ டுருத்துத்தன் மேற்சென்ற சேஎச் செவிமுதற் கொண்டு பெயர்த்தொற்றுங் காயாம் பூங்கண்ணிப் பொதுவன் றகைகண்டை மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய்பகுத் திட்டுப் புடைத்தஞான் றின்னன்கொன் மாயோனென் றுட்கிற்றென் னெஞ்சு; |
56 | ஆங்கு, இரும்புலித் தொழுதியும் பெருங்களிற் றினமு மாறுமா றுழக்கியாங் குழக்கிப் பொதுவரு மேறுகொண் டொருங்குதொழூஉ விட்டனர் விட்டாங்கே மயிலெருத் துறழணி மணிநிலத்துப் பிறழப் பயிலிதழ் மலருண்கண் மாதர் மகளிரு மைந்தரு மைந்துற்றுத் தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ; |
63 | கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே யாய மகள்; |
65 | அஞ்சார் கொலையேறு கொள்பவ ரல்லதை நெஞ்சிலார் தோய்தற் கரிய வுயிர்துறந்து நைவாரா வாயமக டோள்; |
68 | வளியா வறியா வுயிர்காவல் கொண்டு நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற் கெளியவோ வாயமக டோள்; |
71 | விலைவேண்டா ரெம்மினத் தாயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின்; |
74 | ஆங்கு; குரவை தழீஇயா மரபுளி பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொன்னில மாளுங் கிழமையொடு புணர்ந்த வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே. |