19 | ஆயர் மகனாயி னாயமக ணீயாயி னின்வெய்ய னாயி னவன்வெய்யை நீயாயி னின்னைநோ தக்கதோ வில்லைம னின்னெஞ்ச மன்னைநெஞ் சாகப் பெறின்; அன்னையோ; | 24 | ஆயர் மகனையுங் காதலை கைம்மிக ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து; | 27 | மருந்தின்றியா னுற்ற துயராயி னெல்லா வருந்துவே னல்லனோ யான்; | 29 | வருந்தாதி; மண்ணிமா சற்றநின் கூழையு ளேறவன் கண்ணிதந் திட்ட தெனக்கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற் றிவட்கென நின்னையப் பொய்யில் பொதுவற் கடைசூழ்ந்தார் தந்தையோ டையன்மா ரெல்லா மொருங்கு. |
இது தலைவி தோழிக்குஅறத்தொடுநிற்பத் தமர் 1வரைவுடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது. இதன் பொருள். (1) (3) | எல்லா விஃதொன்று 2கூறு குறும்பிவர் புல்லினத் தார்க்குங் (2) குடஞ்சுட் டவர்க்குமெங் கொல்லேறு கோடல் (4) குறையெனக் கோவினத்தார் பல்லேறு பெய்தார் தொழூஉ. |
1. (அ) "புல்லினத்தாயனைநீ யாயிற் குடஞ் சுட்டு, நல்லினத் தாயரெமர்" கலி. 113 : 8 - 9. (ஆ) "புல்லினத்தாய மகன்" கலி. 115 : 4. 2. (அ) "நீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும்" கலி. 109 : 3. (ஆ) "கடுஞ் சுரையா னான்கு, குடஞ்சுட் டினத்தாற் கொடு" பு - வெ. வெட்சிப். 18. 3. "கொல்லேறு கொண்டான்" கலி. 106 : 43. 4. குறை யென்பதற்கு இன்றியமையாததென்று சேனாவரையரும் பரிமேலழகரும் முடிக்கப்படும் பொருளென்று புறநானூற்றுரையாசிரியரும் பொருள் கூறுவர். (பிரதிபேதம்)1வரைவுடம்பட்டமை, 2கூறுங்குறும்பு.
|