19 (1) | ஆயர் மகனாயி னாயமக ணீயாயி னின்வெய்ய னாயி னவன்வெய்யை நீயாயி னன்னைநோ தக்கதோ வில்லைம 1னின்னெஞ்ச மன்னைநெஞ் சாகப் பெறின் |
எ - து: அதுகேட்ட தோழி, அவன் ஆயருடையமகனா யிருப்பானாயின், நீ ஆய்ச்சாதியிற் பிறந்த மகளாயிருப்பையாயின்; (2) 2அவன் உன்னைவிரும்பி யிருப்பானாயின், நீ அவனை விரும்பியிருப்பையாயின், தாய் மிகவும் நோவத் 3தக்கதொருகாரிய மில்லைகாணென்றாள்; அதுகேட்டதலைவி, அன்னையுடைய நெஞ்சு நின்னுடைய நெஞ்சாகப் பெறின் அவள் 4நோவத்தக்கதோ இல்லை யென்றாள். எ - று. 23 அன்னையோ எ - து: அதுகேட்ட தோழி, இன்னும் 5அத்தன்மையையோவென்றாள். எ - று. என்றது, யான் இத்துணையெல்லாம் கூறவும் கொள்ளாத தன்மையையோ? எ - று. 24(3) (4) | ஆயர் மகனையுங் காதலை 6கைம்மிக ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து |
1. "தண்ணிய சிறிய வெய்ய தழற்சொலாற் சாற்று கின்றான்" (சீவக. 747:) என்புழி 'வெய்ய' என்பதற்கு, விரும்பப்படுதலின் வெய்ய வென்றாரென்று விசேடவுரையெழுதி, 'நின்வெய்யனாயின்' என்பதை மேற்கோள்காட்டினர். நச். 2. "தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே, காமத்துக் காழில் கனி" குறள். 1191. 3. 'ஆயர் வேட்டுவர்'என்னும் (தொல். அகத். 21.) சூத்திரவுரையில், 'ஆயர் வேட்டுவரென்னும் இரண்டுபெயரே எடுத்தோதினாரேனும் ஒன்றெனமுடித்தலான் அந்நிலங்கட்குரிய ஏனைப் பெயர்களான் வருவனவுங் கொள்க' என்று கூறி, "ஆயர்மகனையுங்....................நோய்க்கு மருந்து" என்பதை மேற்கோள்காட்டுவர். நச். 4. ஞாய் - நின்றாய்; (அ) "யாயு ஞாயும் யாரா கியரோ" (குறுந். 40.) என்பதனால் யாயென்பது தன்மைப் பெயரடியாகவும் ஞாயென்பது முன்னிலைப் பெயரடியாகவும் பிறந்த முறைப் பெயரென்று துணிய (பிரதிபேதம்)1நின்னெஞ்சமென்னைநெஞ்சாகப், 2இவன், 3தக்கதோர், 4நோகத்தக்கதோ, 5அத்தன்மையோவென்றாள், 6 கைமிக.
|