பக்கம் எண் :

722கலித்தொகை

மின்பமும்" என்னும் (1) சூத்திரத்து, "உறுப்புடை யதுபோ லுணர்வுடையது போன், மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு 1புணர்த்தும்" என்பதனால் உறுப்புடைத்தாகக் கூறினாள்.

இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது.

இது முச்சீரடியும் இருசீரடியும் இடையேவந்த கொச்சகக் கலி. (12)

(113). நலமிக நந்திய நயவரு தடமென்றோ
ளலமர லமருண்க ணந்நல்லாய் நீயுறீஇ
யுலமர லுயவுநோய்க் குய்யுமா றுரைத்துச்செல்;
பேரேமுற் றார்போல முன்னின்று விலக்குவா
யாரெல்லா நின்னை யறிந்ததூஉ மில்வழி:
தளரியா லென்னறிதல் வேண்டிற் பகையஞ்சாப்
புல்லினத் தாயர் மகனேன் மற்றியான்;
ஒக்குமன்;
புல்லினத் தாயனைநீ யாயிற் குடஞ்சுட்டு
நல்லினத் தாய ரெமர்;
11 எல்லா;
நின்னொடு சொல்லி னேதமோ வில்லைமன்;
ஏதமன் றெல்லை வருவான் விடு;
14 விடேன்;
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு
மெல்லிய வாத லறியினு மெல்லியா
னின்மொழிகொண் டியானோ விடுவேன்மற் றென்மொழிகொண்
டென்னெஞ்ச மேவல் செயின்;
19 நெஞ்சேவல் செய்யா தெனநின்றாய்க் கெஞ்சிய
காதல்கொள் காமங் கலக்குற வேதிலார்
பொய்ம்மொழி தேறுவ தென்;
22 தெளிந்தேன் றொயிழா யான்;
23 பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழி
லல்க லகலறை யாயமொ டாடி

1. தொல். பொருளி. சூ. 2.

(பிரதிபேதம்)1கிளந்துமென்பதனால், கிளர்ந்து மென்பதனால்.