| சிறிய துனித்தனை துன்னாசெய் தமர்ந்தனை பலவுநூ றடுக்கினை யினைபேங்கி யழுதனை யலவலை யுடையை யென்றி தோழீ | | கேளினி |
எ - து: (1) கோதைபோல ஒழுங்குவிட்டு விளையாடும் ஆயத்தாரும் தாயும் அறிதலுறும்படி பூவினது அழகையுடைய கண்கள் புகழ்ந்த நலத்தை இழக்கும்படி முன்னர் நம்மிடத்தே மிக்க காதலை நிகழ்த்திப் பின்னர் நமக்கு அருளாதே ஒருகாரண 1மின்றி நம்மைத் துறந்தாரிடத்தே முன்னர்ச்சிறியவாக வெறுத்தனை; பின்னர் அவர் நமக்குப் பொருந்தாக் குறைகளைச் செய்கையினாலே அக்குறைகள் பல நூறுமாக அடுக்கிக்கூறி அதிலே அமர்ந்தனை; அதுவேயுமன்றி வருந்திஏங்கி அழுவதுஞ்செய்தாய்; ஆகலான்நீ (2) அருமருதலையுடையையாயிருந்தாயென்று சொல்லாநின்றாய்; தோழீ! இனி அலமரலைக்கேளென்றாள். எ - று. ஏது, வடமொழி திரிந்து விகாரமாய் நின்றது. 8 | (3) மாணெழின் மாதர் மகளிரோ டமைந்தவன் காணும்பண் பிலனாத லறிவேன்மன் னறியினும் பேணி யவன்சிற் தளித்தக் காலென் னாணி னெஞ்ச நெகிழ்தலுங் காண்பல் |
1. (அ) “திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய, துணையறை மாலையிற் கைபிணி விடேஎம்” குறிஞ்சி. 176 - 177. (ஆ) “கோதையாயமொ டோரை தழீஇ” அகம். 49 : 16. (இ) “கடம்பு சூடிய கன்னிமாலை போற், றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடும்” சீவக. 990. 2. அலவல் - அலமருதல் போலும்; “அலவுற்று” (குறிஞ்சி. 7) என்பதற்கு, ‘அலம் வந்து’ என்று பொருளெழுதப் பட்டிருத்தலும் காண்க. ‘அலவலை’ எனின் மனத்திற் றோன்றியதை ஆராயாது செய்தலாம்; “அலவலை யில்லாக் குடியும்” திரிகடுகம். 34 “அலவலைச் செய்திக் கஞ்சினன்” மணி. 7 : 51. “அலவலை நீர்த்தா லத்தைநின் னலரென” பெருங். (1) 36 : 386. எனவருதல்காண்க. “அலவலைத்து வாழ்பவர்” பழ. 326. என்பதற்கு ‘நாணமில்லாததன்மையைச் செய்து வாழ்பவர்’ என்று பொருள்செய்திருப்பது நோக்கி அலவலை யென்பதற்கு, நாணமின்மை யென்று பொருள் கொள்வாரு முளர். பின் “நாணி னெஞ்சம்” என வருதலும் நோக்குக. 3. கலி. 67 - ஆம் செய்யுட்டாழிசைகள் இங்கே ஒப்புநோக்கற்பாலன. (பிரதிபேதம்) 1இன்றியே நம்மை.
|