| 1தானவர் பாற்பட்ட தாயி னாமுயிர் வாழ்தலோ நகைநனி யுடைத்தே |
எ - து: ஆகையினாலே காமநோயாலே மிக்க நெஞ்சந்தான் (1) நடுநாள் யாமத்தில் நாங்கொள்ளுந் துயிலைவாங்கிக் கொண்டு ஒளித்தவர் பகுதியிலே பட்டுவிட்டதாயின், இனி நாமிருந்து உயிர்வாழ்கையோ மிகப் பிறர் சிரித்தலையுடைத்தென்று தோழி வரைவுகடாவுதற்குக் கூறினாள். எ - று. இதனால், ‘தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தையும்’ (2) கூறினாள். இதனால், தலைவிக்கு 2இழிவு பிறந்தது. இது, கேளினி எனச் சொற்சீரடிவந்தமையிற் கொச்சகம். (5) 123 | (3) கருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை மிசைதொறுஞ் சுரும்பார்க்குங் குரலினோ டிருந்தும்பி யியைபூத வொருங்குட னிம்மென விமிர்தலிற் பாடலோ டரும்பொருண் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போற் பெருங்கட றுயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்; | 6 | காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே; | 9 | கொல்லேற்றுச் சுறவினங் கடிகொண்ட மருண்மாலை யல்லனோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மடநெஞ்சே; | 12 | வெறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினாற் செறிவளை நெகிழ்த்தான்கட் சென்றாய்மற் றவனைநீ யறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே; | | எனவாங்கு; |
1. நடுநாள் - இடையாமம்; “நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்” புறம். 189 : 3. 2. தொல். கள. சூ. 20. 3. இச்செய்யுள், தரவகப்பட்ட மரபிற்றாகித் தாழிசை வந்ததற்கும் (தொல். செய். சூ. 134. பேர்.) தரவிற்கு அடியைந்தாகச் சுரிதகம் நான்கடியாய்ச் சுருங்கி வந்ததற்கும் (தொல். செய். சூ. 137. பேர்) மேற்கோள். (பிரதிபேதம்) 1தாமவர், 2இளிவு.
|