பக்கம் எண் :

784கலித்தொகை

குவிந்திருக்குஞ் சேர்ப்பன் என்றதனால், நின்னாட்டின் மகளிர் பிரிந்திருந்தார் உயிர்போதற்கு வேண்டுந் தீங்குகளைப் பகற்பொழுதெல்லாங் கூறி அந்திக் காலத்து ஆரவாரத்தைத் தவிர்ந்து நல்ல மகளிரைப் போலே ஒடுங்கி உறைகின்றார் என உள்ளுறையுவமங்கூறியவாறு உணர்க.

6அணிச்சிறை யினக் (1) குரு கொலிங்குங்கா னின்றிண்டேர்
மணிக்குர லெனவிவண் மதிக்குமன் மதித்தாங்கே
யுள்ளான்ற வொலியவா யிருப்பக்கண் (2) டவைகானற்
புள்ளென வுணர்ந்துபிற் புலம்புகொண் டினையுமே

எ - து : அழகினையுடைத்தாகிய சிறகினையுடைய குருகுகள் இராக் காலத்து ஒருகால் ஒலிக்குமிடத்து நின்னுடைய திண்ணிய தேரின்மணியினோசையென்று இவள் மிகவும் துணியாநிற்கும்; துணிந்த அப்பொழுதே அப்பறவைகள் உள்ளடங்கிய ஒலியையுடையவாய் ஆரவாரியாதிருக்க, அதனைத் தன் (3) மனத்தாலே தேர்மணியொலியல்லவென்று கண்டு, பின்னர் அவ்வொலியைக் கானலிடத்துப் பறவைகளொலியென்று உணர்ந்து, பின்பு தனிமைகொண்டு வருந்தாநிற்கும். எ - று.

10

 

நீர்நீவிக் கஞன்றபூக் கமழுங்கா னின்மார்பிற்
றார்நாற்ற மெனவிவண் மதிக்குமன் மதித்தாங்கே
யலர்பதத் தசைவளி வந்தொல்கக் கழிப்பூத்த
மலரென வுணர்ந்துபின் மம்மர்கொண் டினையுமே

எ - து: நீரைக் கைவிட்டு மேலாய் நெருங்கின பூ அலர்ந்து நாறுமிடத்து நின்மார்பிற் கிடந்த மாலையினது நாற்றமென்று இவள் மிகவுந் துணியாநிற்கும்; துணிந்த அப்பொழுதே அப்பூக்கள் அலருஞ் செவ்வி


1. இந்நூற்பக்கம் 763 : 5 - ஆம் குறிப்புப் பார்க்க.

2. (அ) ‘அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமா பூண்ட, மணியரவ மென்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும், புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழா, யுள்ளுருகு நெஞ்சினே னாய்’ ஐந் - ஐம். 50. (ஆ) ”இடுமணலெக்க ரகன்கானற்சேர்ப்பன், கடுமாமணியரவமென்று கொடுங்குழாய், புள்ளரவங் கேட்டுக் கலுழ்ந்தாள் சிறுகுடிய, ருள்ளரவ நாணுவ ரென்று” ஐந் - எழு. 59.

3. காணுதலென்பதற்கு விளங்கவறிதலென்று நீலகேசியுரையாசிரியர் பொருள் கூறுதலால், இங்கே அது காதினால் விளங்கவறிதலின்மேல் நின்றதென்றலுமாம். “நம்பி தந்த கீத மேந யந்து காண வோடினார்” (சீவக. 2037.) என்புழி, காணவென்பதற்கு, கேட்கவென்றுபொருள் கூறியிருத்தலும் இங்கே அறிதற்பாலது.