பக்கம் எண் :

786கலித்தொகை

மதிமருள் வாண்முகம் விளங்கப்
புதுநல மேர்தரப் பூண்கநின் றேரே

1எ - து: பலவற்றையும் நினைத்து வருந்தும் நோயையுடைய நெஞ்சாலே சுழலுதலையுடைய காமநோயிலே அழுந்தும் என் தோழியுடைய மதியென்று மருளும் ஒளியினையுடைய முகம் விளங்கும்படி புதிய நலம் எழுதலைச் செய்ய நின் தேர் குதிரையைப் பூண்பதாகவென வரைவுகடாயினாள். எ - று.

இதனால் தலைவற்குப் புணர்ச்சி யுவகை பிறந்தது.
இஃது ஒத்தாழிசைக்கலி. (9)


(127)

தெரியிணர் ஞாழலுந் தேங்கமழ் புன்னையும்
புரியவிழ் பூவின கைதையுஞ் செருந்தியும்
வரிஞிமி றிமிர்ந்தார்ப்ப விருந்தும்பி யியைபூதச்
செருமிகு நேமியான் றார்போலப் பெருங்கடல்
வரிமணல் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப;

6

கொடுங்கழி வளைஇய குன்றுபோல் வாலெக்கர்
நடுங்குநோய் தீரநின் குறிவாய்த்தா ளென்பதோ
கடும்பனி யறலிகு கயலேர்கண் பனிமல்க
விடும்பையோ டினைபேங்க விவளைநீ துறந்ததை;

10

குறியின்றிப் பன்னாணின் கடுந்திண்டேர் வருபதங்கண்
டெறிதிரை யிமிழ்கான லெதிர்கொண்டா ளென்பதோ
வறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச்
செறிவளை தோளூர விவளைநீ துறந்ததை;

14

காண்வர வியன்றவிக் கவின்பெறு பனித்துறை
யாமத்து வந்துநின் குறிவாய்த்தா ளென்பதோ
வேய்நல மிழந்ததோள் விளங்கிழை பொறையாற்றாள்
வாணுதல் பசப்பூர விவளைநீ துறந்ததை;

அதனால்;

19

இறைவளை நெகிழ்ந்த வெவ்வநோ யிவடீர
வுரவுக்கதிர் தெறுமென வோங்குதிரை விரைபுதன்
கரையம லடும்பளித் தாஅங்
குரவுநீர்ச் சேர்ப்ப வருளினை யளியே.

(பிரதிபேதம்) 1எ -து: என்று பலவற்றையும்.