பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்811

இதன் பொருள்

பெருங்கடற் றெய்வநீர் நோக்கித் தெளித்தென்
றிருந்திழை மென்றோண் மணந்தவன் செய்த
வருநதுயர் நீக்குவேன் போன்மற் 1பொருந்துபு
(1) பூக்கவின் கொண்ட (2) புகழ்சாலெழிலுண்க
5(3) ணோககுங்கா னோக்கி னணங்2காக்குஞ் சாயலாய் தாக்கி
யினமீ னிகன்மாற வென்ற சினமீ
(4)னெறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த
(5)நெய்த னெடுநார்ப் 3பிணித்தியாத்துக் கையுளர்வின்
(6)யாழிசை கொண்ட வினவண் டிமிர்ந்தார்ப்பத்
தாழா துறைக்குந் தடமலர்த் தண்(7)டாழை
வீழூச றூங்கப் பெறின்;

1. ‘‘பூவுயிர்த் தன்ன புகழ்சா லெழிலுண்கண்’’ கலி. 142: 11.

2. ‘‘தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று’’ புகழ்தல்.

3. ‘‘நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண்டன்ன துடைத்து’’ குறள். 1082.

4 (அ) ‘‘எறிசுறாக் குப்பை யினங்கலக்கத்தாக்கு, மெறிதிரை’’ ஐந்-எழு. 65 (ஆ) ‘‘எறிசுறா நீள்கட லோத முலாவ’’ திணைமொழி. 43. (இ) இந்நூற்பக்கம் 772: 3-ஆம் குறிப்புப் பார்க்க.

5. ‘‘குவளையைத், தன்னாரா லியாத்து விடல்’’ (பழ. 365.) எனவும் ‘‘குமிழின், புறழ்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின், வில்யாழிசைக்கும் விரலெறிகுறிஞ்சிப், பல்காற்பறவை கிளைசெத்தோர்க்கும்’’ (பெரும்பாண். 180 - 183.) எனவும் வருவன இங்கே நோக்கற்பாலன.

6. ‘‘யாழ்போல வண்டார்க்கும்’’ கலி. 32: 9 என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

7. (அ) ‘‘தாழை வீழ்க் கயிற்றூச றூங்கி’’ அகம். 20 : 6. (ஆ) ‘‘கானலொருசிறை, மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த விழ்பூங்கோதையோ டவிரிழை பொங்க வெக்கர்த் தாழை, நீர்த்துறைத் தாழ்ந்த, நெடுவீ ழூசன் முடிபிணி யேறித், தொடுவேன், முற்றத்துத் தோழியோ, டாடா’’ பெருங். (1) 40 : 109 - 114 எனப் பிற நூல்களுள்ளும் வருதல் காண்க. இது விழுதுடைமையால் (இ) ‘வீழ்த்தாழை’ என்றும் தாழையென்னும்பெயரைத் திரிசொல்லாகவுடைய தென்னை வீழின்மையால் (ஈ) ‘வீழி றாழை’ என்றும் கூறப்படும். இங்கே கூறப்படும் வீழ்த்தாழை

(பிரதிபேதம்)1பொருந்து பூக்கவின், 2ஆகுஞ் சாயல், 3பிணித்தியார்த்து, பிணியாத்து.