(44) | கதிர்விரி கனைசுடர்க் கவின்கொண்ட நனஞ்சார லெதிரெதி ரோங்கிய மால்வரை யடுக்கத் ததிரிசை யருவிதன் னஞ்சினை மிசைவீழ முதிரிண ரூழ்கொண்ட முழவுத்தா ளெரிவேங்கை வரிநுத லெழில்வேழம் பூநீர்மேற் சொரிதரப் புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் திருநயந் திருந்தன்ன தேங்கமழ் விறல்வெற்ப; | 8 | தன்னெவ்வங்கூரினு நீசெய்த வருளின்மை யென்னையு மறைத்தாளென் றோழியதுகேட்டு நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறறானாணி | 11 | கூருநோய்சிறப்பவு நீசெய்த வருளின்மை சேரியு மறைத்தாளென் றோழியதுகேட்டாங் கோருநீ நிலையலை யெனக்கூறறானாணி; | 14 | நோயடவருந்தியு நீசெய்த வருளின்மை யாயமு மறைத்தாளென் றோழியதுகேட்டு மாயநின் பண்பின்மை பிறர்கூறறானாணி; எனவாங்கு; | 18 | இனையன தீமைநினைவனள் காத்தாங் கனையரும் பண்பினானின்றீமை காத்தவ ளருந்துய ராரஞர் தீர்க்கு மருந்தாகிச்செல்கம் பெருமநாம் விரைந்தே. |
இது வரையாது வந்தொழுகுந் தலைவனை, தோழி, தலைவியது கற்பு 1மிகுதியும் இவ்வொழுக்கம் அலராகின்றமையும் அவளது ஆற்றாமையுங் கூறி வரைவுகடாயது. இதன்பொருள் (1)கதிர்விரி கனைசுடர்க் கவின்கொண்ட (2)நனஞ்சார லெதிரெதி ரோங்கியமால்வரை யடுக்கத்
1. கனைசுடர், கலி. 120 : அகம். 47 : 9 2. "நனஞ்சாரல்" கலி. 45 : 6. 52 : 6. (பிரதிபேதம்) 1மிகுதியு மலராகின்றமையும்.
|