எ - து: என்னுடைய தோழி காமநோய் வருத்துகையினாலே வருந்தியும் நீசெய்த அருளில்லாமையை ஆயத்தையும் மறைத்தாள்; அவள் இங்ஙனம் மறைத்தது அவ்வரு ளின்மையைக் கேட்டு மாயத்தை வல்ல நினது பண்பில்லாமையைப் பிறர்கூறுதலைத் தான் நாணிக்காண் ; எ - று. ஆயத்திற்கும் வருத்தம் புலப்படாமை மறைத்தாளென்ற உம்மை, சிறப்பும்மை. 1எனவாங்கு, அசை. 18 | இனையன தீமை நினைவனள் காத்தாங் கனையரும் பண்பினா னின்றீமை காத்தவ ளருந்துய ராரஞர் தீர்க்கு மருந்தாகிச் செல்கம் பெருமநாம் விரைந்தே |
எ - து: நினது தீமையான் உண்டாகிய அருந்துயரத்தை அத்தன்மைத்தாகிய அரிய நற்குணத்தினானே நீ பின்னர்க் காத்தாற்போல இத்தன்மையனவாகிய தீமைகளைப் பிறரறியாதபடி நினைத்தாளாய்க் காத்தவளுடைய ஆரஞரைத்தீர்க்கும் மருந்தாகிப் பெருமா ! நாம்விரைந்துசெல்வேம்; 2எ - று. தீமையாயின: இட்டுப் பிரிவும் அருமை செய்தயர்த்தலுமாம். இதனால், தலைவற்கு 3விரைவுபிறந்தது. இஃது ஏழடித்தரவும் மூன்றடித்தாழிசையும் தனிச்சொல்லும் நான் கடிச்சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (8) (45) | விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறைக் கடிசுனைக் கவினிய காந்தளங் குலையினை யருமணி யவிருத்தி யரவுநீ ருணல்செத்துப் பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைபெய லுருமுக்கண் ணுறுதலி னுயர்குர லொலியோடி நறுவீய நனஞ்சாரற் சிலம்பலிற் கதுமெனச் சிறுகுடி துயிலெழூஉஞ் சேணுயர் விறல்வெற்ப; | 8 | கால்பொரநுடங்கல கறங்கிசை யருவிநின் மால்வரை மலிசுனைமலரேய்க்கு மென்பதோ புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பியவென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீசிதைத்ததை; | 12 | புகர்முகக் களிறொடு புலிபொருதுழக்குநின் னகன்மலை யடுக்கத்த வமையேய்க்குமென்பதோ |
(பிரதிபேதம்) 1 ஆங்கசை, இனையின தீமை, 2 என வரைவு கடாவினாள் 3 வரைவு
|