பக்கம் எண் :

302கலித்தொகை

(50). வாங்குகோ னெல்லொடு வாங்கி வருவைகன்
மூங்கின் மிசைந்த முழந்தா ளிரும்பிடி
தூங்கிலை வாழை நளிபுக்கு ஞாங்கர்
வருடை மடமறி யூர்விடைத் துஞ்சு
மிருடூங்கு சோலை யிலங்குநீர் வெற்ப;
6அரவி்ன் பொறியு மணங்கும் புணர்ந்த
வுரவுவின் மேலசைத்த கையை யொராங்கு
நிரைவளை முன்கையென் றோழியை நோக்கிப்
படிகிளி் பாயும் பசுங்குர லேனல்
10கடிதன் மறப்பித்தா யாயி னினிநீ
நெடிதுள்ள லோம்புதல் வேண்டு மிவளே
பல்கோட் பலவின் பயிர்ப்புறு தீங்கனி
யல்கறைக் கொண்டூ ணமலைச் சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்;
15நீயே, வளியி னிகன்மிகுந் தேருங் களிறுந்
தளியிற் சிறந்தனை வந்த புலவர்க்
களியொடு கைதூ வலை ;
அதனால்;
19கடுமா கடவுறூஉங் கோல்போ லெனைத்துங்
கொடுமையிலை யாவ தறிந்து மடுப்பல்
வழைவளர் சாரல் வருடை நன்மான்
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி
யுழையிற் பிரியிற் பிரியு
மிழையணி யல்குலென் றோழியது கவினே.

இது "புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்" (1) தோழி கூறியது. அது தோழியிற்கூட்டம் நிகழ்ந்தபின் முற்காலத்துப் பணிந்து பின்னின் றோனைத் தோழி தானே பணிந்தொழுகுதலாம்.

இதன் பொருள்.

வாங்குகோ னெல்லொடு வாங்கி வருவைகன்
(2)மூங்கின் மிசைந்த (3) முழந்தா ளிரும்பிடி



1. தொல். கள. சூ. 23.

2. மிசைதல் தின்றலென்னும் ஒருவினைப் பொருளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள். தொல். கிளவி. சூ. 46. நச். பெரும்பா. 262.

3. "முழந்தா ளிரும்பிடி" குறுந். 394.