பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி369

வந்த (1) போக்கிலக்கணமில்லா 1நிலைமண்டில வாசிரியச்சுரிதகமும் பெற்று வந்தஉறழ்கலி. 2“மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டுஞ், செந்தூக் கியல வென்மனார் புலவர்” (2) என்பதனான் 3மண்டிலங்கொள்க. (24)

(61).எல்லா விஃதொத்த னென்பெறான் கேட்டைக்காண்
செல்வங் கடைகொளச் சாஅய்ச் சான்றவ
ரல்லல் களைதக்க கேளி ருழைச்சென்று
சொல்லுத லுற்றுரைக் கல்லா தவர்போலப்
பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியானோக்கின்
மெல்ல விறைஞ்சுந் தலை;
7எல்லாநீ, முன்னத்தானொன்று குறித்தாய்போற் காட்டினை
நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவா
யென்னீ பெறாததீ தென்;
10சொல்லின், மறாதீவாண் மன்வேள்;
செறாஅது, ஈத லிரந்தார்க்கொன் றாற்றாது வாழ்தலிற்
சாதலுங் கூடுமா மற்று;
13இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள்
யாதுநீ வேண்டியது;
15பேதாய், பொருள்வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ
மருளி மடநோக்கி னின்றோழி யென்னை
யருளீயல் வேண்டுவல் யான்;
18அன்னையோ, மண்டம ரட்ட களிறன்னான் றன்னையொரு
பெண்டி ரருளக் கிடந்த தெவன்கொலோ;
20ஒண்டொடீ, நாணிலன் மன்ற விவன்;
ஆயின் ஏஎ;
22பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி
மல்லலூ ராங்கட் படுமே நறுநுத
னல்காள்கண் மாறி விடினெனச் செல்வானா

1. இச்செய்யுள் போக்கிலக்கணமில்லாத ஆசிரியச்சுரிதகம்பெற்ற உறழ் கலிக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 156. பேர். நச்.

2, தொல். செய். சூ. 117.

(பிரதிபேதம்)1நிலைமண்டல, 2மண்டலங்குட்ட, 3மண்டலங்கொள்க.