வந்த (1) போக்கிலக்கணமில்லா 1நிலைமண்டில வாசிரியச்சுரிதகமும் பெற்று வந்தஉறழ்கலி. 2“மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டுஞ், செந்தூக் கியல வென்மனார் புலவர்” (2) என்பதனான் 3மண்டிலங்கொள்க. (24) (61). | எல்லா விஃதொத்த னென்பெறான் கேட்டைக்காண் செல்வங் கடைகொளச் சாஅய்ச் சான்றவ ரல்லல் களைதக்க கேளி ருழைச்சென்று சொல்லுத லுற்றுரைக் கல்லா தவர்போலப் பல்லூழ் பெயர்ந்தென்னை நோக்குமற் றியானோக்கின் மெல்ல விறைஞ்சுந் தலை; | 7 | எல்லாநீ, முன்னத்தானொன்று குறித்தாய்போற் காட்டினை நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவா யென்னீ பெறாததீ தென்; | 10 | சொல்லின், மறாதீவாண் மன்வேள்; செறாஅது, ஈத லிரந்தார்க்கொன் றாற்றாது வாழ்தலிற் சாதலுங் கூடுமா மற்று; | 13 | இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டியது; | 15 | பேதாய், பொருள்வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ மருளி மடநோக்கி னின்றோழி யென்னை யருளீயல் வேண்டுவல் யான்; | 18 | அன்னையோ, மண்டம ரட்ட களிறன்னான் றன்னையொரு பெண்டி ரருளக் கிடந்த தெவன்கொலோ; | 20 | ஒண்டொடீ, நாணிலன் மன்ற விவன்; ஆயின் ஏஎ; | 22 | பல்லார்நக் கெள்ளப் படுமடன் மாவேறி மல்லலூ ராங்கட் படுமே நறுநுத னல்காள்கண் மாறி விடினெனச் செல்வானா |
1. இச்செய்யுள் போக்கிலக்கணமில்லாத ஆசிரியச்சுரிதகம்பெற்ற உறழ் கலிக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 156. பேர். நச். 2, தொல். செய். சூ. 117. (பிரதிபேதம்)1நிலைமண்டல, 2மண்டலங்குட்ட, 3மண்டலங்கொள்க.
|