பக்கம் எண் :

மூன்றாவது மருதம்403

எ - து: என்று யாங்கள் காணும்படியாக; எ - று.
ஆங்கு, அசை.

22 அளிபெற்றே மெம்மைநீ யருளினை விளியாது
(1)வேட்டோர் திறத்து விரும்பிய 1நின் பாகனு
நீட்டித்தா யென்று கடாஅங் கடுந்திண்டேர்
பூட்டு விடாஅ நிறுத்து

2எ - து: நீ ஈண்டு வருதலாலே நினது அளியைப்பெற்றேம்; நீயும் எம்மை அருளினை; இதுவே அமையும்; இனி நீ விரும்பியோர்திறத்தே நீ செல்லுதலை விரும்பிய நின்பாகனும் பூட்டுதலைவிடாத கடிய திண்ணியதேரை நீ இவ்விடத்தே தாழ்த்தாயென்று கருதி அது நிற்கும் நிலையிலே செலுத்தும்; அதற்கு முன்னே சென்று அப்பரத்தையர் அன்பு கெடாமல் அவ்வன்பை 3நிறுத்துவாயாக; எ - று.

விளியாது நிறுத்து எனக் கூட்டுக.
இதனால், இருவர்க்கும் புணர்ச்சியுவகை பிறந்தது.
இது வெள்ளைச்சுரிதகத்தாலிற்ற ஒத்தாழிசைக்கலிப்பா. (1)
(67) கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
னீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார்
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலுாரன்;
6 நலத்தகை யெழிலுண்க ணல்லார்தங் கோதையா
லலைத்தபுண் வடுக்காட்டி யன்பின்றி வரினெல்லா
புலப்பேன்யா னென்ே்பன்ம னந்நிலையே யவற்காணிற்
கலப்பே னென்னுமிக் கையறு நெஞ்சே;

1. "காம நிலையுரைத்தலும்" என்னும் தொல். கற்பியல், 36 - ஆம் சூத்திரத்தின் இவருரையில் "பாங்கன் கூறுவன நோய்மருங் கறிநருளடக்கிக் கொண்டு எடுத்து மொழியப்படுதலன்றிக் கூற்று அவணின்மை உணர்க; அது: 'வேட்டோர்...................... நிறுத்து' என[வும்] வரும்" என்பது காணப்படுகிறது; அதனைநோக்கப் பாங்கனே இங்குத்தேர்ப்பாகனா யிருந்தனனென்றுகொள்ள வேண்டுமென்று தோற்றுகிறது. இஃது ஆராய்தற்பாலது.

(பிரதிபேதம்) 1நின்பாகனீ நீட்டித்தாயென்று 2எ - து என்று யாங்கள் காணும்படியாக நீ யீண்டு, 3நிறுத்துவாயென்றாள் விவியாது நிறுத்தெனமாறுக இதனால்.